Skip to main content

திண்டுக்கல் பெண்களைப் பாராட்டிய மோடி! - கலைஞருக்கு 'நன்றி' சொன்ன பெண்கள்!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

Tamil Nadu Women's Self Help Group receives praise from Indian Prime Minister

 

இந்தியப் பிரதமரின் பாராட்டுகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது முன்னாள் முதல்வர் கலைஞர் வழங்கிய (சுய உதவிக்குழுக்களுக்கான) சுழல் நிதியே காரணம் என சுய உதவிக்குழு பொறுப்பாளர் ஜெயந்தி புகழாரம் சூட்டினார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது எங்களுக்கு வழங்கிய சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவி மறக்க முடியாதது என்றார். இந்தியப் பிரதமரான மோடி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடல் செய்தார்.

 

அதன்படி உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பயனாளிகளுடன் காணொலி மூலம் பேசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் என்.பஞ்சம்பட்டி ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டது. இந்த கூட்டமைப்பு 2010ம் வருடம் முதல் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்து அதைப் பயனுள்ள பொருட்களாக மாற்றுவதோடு, கிராமத்தின் சுகாதாரத்திற்குப் பேருதவியாக இருந்து வருகிறது.

 

Tamil Nadu Women's Self Help Group receives praise from Indian Prime Minister

 

என்.பஞ்சம்பட்டியில் நடைபெற்ற காணொளி காட்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ,சுய உதவிக்குழு கூட்டமைப்பு பொறுப்பாளர் ஜெயந்தியை பாராட்டியதோடு, இந்தியாவில் உள்ள மற்ற சுய உதவிக்குழுக்களும் இவர்களைப் போல் கிராம வளர்ச்சிக்குப் பாடுபட வேண் டும் எனக் கூறினார்.  இதுபற்றி என்.பஞ்சம்பட்டி சுய உதவிக்குழு கூட்டமைப்பு பொறுப்பாளர் ஜெயந்தியிடம் கேட்டபோது, “தமிழகத்தில் முதன்முறையாக சுழல்நிதி வழங்கியவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அவரது ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கினார்.

 

இதுபோல அப்போதைய வருவாய்த்துறை அமைச்சராக இருந்த அண்ணன் ஐ.பெரியசாமியும் தொடர்ந்து எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதோடு கடந்த 10 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், எங்கள் சுயஉதவிக்குழு கூட்டமைப்பு வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். தற்போது தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று ஆத்தூர் தொகுதி மக்களின் பாதுகாவலர் அண்ணன் ஐ.பெரியசாமி சுய உதவிக்குழு பெண்களின் வாழ்வாதாரம் உயர தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது தமிழகத்தில் உள்ள அனைத்து சுய உதவிக்குழு பெண்களின் வாழ்வாதாரம் உயர உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். 

 

Tamil Nadu Women's Self Help Group receives praise from Indian Prime Minister
                                                                                ஜெயந்தி

 

இந்த சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன், மகளிர் திட்ட இயக்குனர் சுரேஷ், ஒன்றியப் பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், திமுக ஒன்றியச் செயலாளர் முருகேசன், என்.பஞ்சம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நாகராஜ், துணைத்தலைவர் ஜோசப், ஊராட்சி மன்றச் செயலாளர் சேசுராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி காணொளிக் காட்சி மூலம் பாராட்டியதைக் கேள்விப்பட்ட கூட்டறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு சுய உதவிக் குழுவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.