Published on 12/02/2021 | Edited on 12/02/2021

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. திமுக சார்பிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (12.02.2021) திருப்பூரில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேசுகையில், ''தமிழகத்தில் எங்கேயும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படவில்லை. ரேஷன் கடைகள் நியாயவிலைக் கடைகளாக நடக்க வேண்டும். ஆனால் அவை நியாயமாக நடப்பதைப் போல் தெரியவில்லை. வெற்றி நடை போடும் தமிழகம் என விளம்பரத்தில் கூறிவிட்டு முதல்வர்தான் நடக்கிறார். தமிழகம் வெற்றிநடை போடவில்லை'' என்றார்.