Published on 26/09/2019 | Edited on 26/09/2019
லஞ்சம் வாங்கிய வழக்கில் விழுப்புரம் ஊழல் ஒழிப்பு பிரிவு நீதிமன்றத்தின் மூலம் சர்பதிவாளர் அலுவலக இளநிலை அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.
![man arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/1iWOpCPE51KsXMFJ0H6n9Ay3AaMFvcfcOsXOXOUsNa0/1569490744/sites/default/files/inline-images/arrest%202_0.jpg)
உளுந்தூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி செய்த சகாதேவன் என்பவர் வில்லங்கம் சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அந்த வழக்கு விழுப்புரம் ஊழல் ஒழிப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 4,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அவர்கள் என்று உத்தரவிட்டார்.