மதுரையில் பரபரப்பு பள்ளிவாசலில் வெடிகுண்டு வீச்சு

இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகிகள், கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து சோதனை மேற்கொண்டனர். மாடிப்பகுதியிலிருந்து பள்ளிவாசலுக்குள் வெடிகுண்டு தூக்கி வீசப்பட்டிக்கலாம் என்பதால், அருகாமை மாடி வீடுகளுக்கும் சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
பந்து போன்ற பிளாஸ்டிக் உருளைக்குள் 250 கிராம் வெடிமருந்து இருந்ததும் தெரிந்தது. சிதறிக் கிடந்த வெடிமருந்துடன், துகள்களையும் போலீசார் சேகரித்தனர். கைப்பற்றப்பட்ட வெடிமருந்தை நிபுணர்கள் கொண்டு சென்று, புறநகர் பகுதியில் வெடித்து செயலிழக்க வைத்தனர். அதிக அழுத்தத்துடன் மோதினால் பெரிய அளவில் வெடித்து சிதறும் வகையில் இந்த குண்டு தயாரிக்கப்பட்டிருந்தது என நிபுணர்கள் தெரிவித்தனர். இதன்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்,’’ என்றனர்.