Published on 29/06/2021 | Edited on 29/06/2021
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஜிபி திரிபாதி நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிரடிக்கு பெயர் போன சைலேந்திர பாபு 1987ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.