Published on 22/10/2018 | Edited on 22/10/2018

ஆணின் திருமண வயதை 21ல் இருந்து 18ஆக குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், மனுவை தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.