Skip to main content

பாலாற்று தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாணவர்கள் மாயம்

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
பாலாற்று தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாணவர்கள் மாயம்



வேலூர் மாவட்டம், வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியில் பாலாற்று தடுப்பணையில் இன்று காலை 11 மணிக்கு குளிக்கச்சென்ற பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயதான இம்தியாஸ் மற்றும் அல்தாப் நீரில் மூழ்கி காணவில்லை இவர்களை தேடும் பணியில் அப்பகுதியினர் ஈடுபட்டனர். 

இதில் இம்தியாஸ் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அல்தாப் நீரில்மூழ்கி ஒரு மணிநேரம் ஆன நிலையில் தற்போது தீயணைப்புதுறையினர் அவரது உடலை தேடும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் ஈடுபட்டு உள்ளனர். இன்னும் அவரது உடல் கிடைக்கவில்லை. 

- ராஜா.

சார்ந்த செய்திகள்