Skip to main content

"கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்" மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது !

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் "கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்" (Kendriya Vidyalaya Schools) இந்தியா முழுவதும் சுமார் 1128 பள்ளிகள் இயங்கி வருகின்றனர். இதில் தமிழகத்தில் சென்னை , கோவை , கல்பாக்கம் , தர்மபுரி , அரக்கோணம் , திருச்சி உட்பட பல மாவட்டங்களில் 42 பள்ளிகள் இயங்கி வருகின்றனர். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (Kendriya Vidyalaya Schools) இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளிகளில்  2019- 2020 ஆண்டுக்கான (Admission) மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இதன் படி ஒன்றாம் வகுப்பிற்கான விண்ணப்ப விநியோகம்  01/03/2019 அன்று காலை 8.00 AM மணி முதல் தொடங்கும் எனவும்  , விண்ணப்பிக்க கடைசி நாள் 19/03/2019 அன்று மாலை 4.00 PM  மணிக்கு நிறைவடையும் என கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயக்குநரகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 

kv school application

மேலும் இரண்டாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் தொடங்கும் நாள் 02/04/2019 அன்று காலை 8.00 AM மணி முதல் 09/04/2019. அன்று மாலை 4.00 PM மணி வரை விண்ணப்பிக்கலாம் என கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயக்குநரகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேபோல் இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பிற்கு (1st Standard) விண்ணப்பிக்க இதற்கான இணையதள முகவரி : https://kvsonlineadmission.in . இரண்டாம் வகுப்பு (2nd Standard) முதல் பதி்னொன்றாம் வகுப்பு (11th standard) வரை விண்ணப்பிக்க இதற்கான இணையதள முகவரி : www.kvsangathan.nic.in ஆகும். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் மொபைலில் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் மொபைல் செயலியை (Mobile Application) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான இணையதள முகவரி : https://kvsonlineadmission.in/apps/. மேலும் இது தொடர்பான முழு விபரங்களுக்கு இணைய தள முகவரி : www.kvsangathan.nic.in என்ற இணைய தளத்திற்கு சென்று மாணவர்கள் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை அறிந்து கொண்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 
 

kv school

இதில் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கென தனி ஒதுக்கீட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகை பள்ளிகளில் முன்னால் ராணுவ வீரர்கள் , மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் , மத்திய அரசு ஊழியர்கள் , மத்திய விமானப்படை ஊழியர்கள் , மத்திய ரயில்வே துறை ஊழியர்கள் உட்பட அனைத்து மத்திய அரசின் ஊழியர்களின் குழந்தைகளுக்கும் இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தருவது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தான் சமீபத்தில் நாடு முழுவதும் சுமார் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகத்தில் புதியதாக நான்கு பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த பள்ளியில் (Right To Education Act -2009 ) சட்டத்தின் கீழ் ஏழை , எளிய குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இதற்காக 25% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம். இந்த பள்ளிகள் குறித்து தமிழக மக்களுக்கு அதிகளவிற்கு தெரியாது. இனி வரும் காலங்களில் இது குறித்து தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

 

பி.சந்தோஷ் ,சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.