Skip to main content

சோனியா, ராகுலுடன் குமாரசாமி 40 நிமிட ஆலோசனை!

Published on 21/05/2018 | Edited on 22/05/2018
s1

 

 

கர்நாடக முதல்வராக நாளை மறுதினம் குமாரசாமி பதவியேற்க உள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் அவர் பதவியேற்கவிருக்கும் நிலையில்  இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  40 நிமிடங்கள் இந்த ஆலோசனை நீடித்தது.

 

s2

 

 பின்னர் வெளியே வந்த குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவுக்கு இருவரும் வருவதாக உறுதியளித்துள்ளனர்.  கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உடன் அமைச்சரவை தொடர்பாக விவாதிக்க ராகுல் அனுமதி அளித்துள்ளார். உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை நடத்தி முடிவுகளை இறுதி செய்வார்” என்று கூறினார்.
 

s3

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000; காங்கிரஸை விமர்சிக்கும் குமாரசாமி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

 kumarasamy talks about karnataka family women 2 thousand amount scheme

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து கர்நாடகாவில் அமல்படுத்த உள்ள இலவச மின்சார திட்டம் சொந்தமாக வீடு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பொருந்தாது என்று மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா ட்விட்டரில், "வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும். வறுமைக்கோட்டுக்கு கீழ் மற்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ரூ.2,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் வருமான வரி செலுத்துவோர் மற்றும் ஜிஎஸ்டி பதிவு செய்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் பெங்களூருவில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்து அவர் பேசுகையில், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி கூறியது என்ன. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றனர். வீடுகளுக்கு 200 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றனர். ஆனால் தற்போது காங்கிரஸ் அரசு இந்த திட்டங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்து வருகிறது.

 

தற்போது சமூக வலைத்தளங்களில் தோசை கதை வைரலாகி வருகிறது. அதாவது ஹோட்டல்களில் தோசை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து விட்டு அதே நேரம் தோசைக்கு வைக்கும் சட்னிக்கு அதிக விலை வாங்குகிறார்களாம். அதுபோல தான் காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் இலவச திட்டங்கள் நிபந்தனையின்றி வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு தற்போது விதிமுறைகளை வகுத்து வருகின்றனர். வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் பணம் கிடைக்காது என்று முதல்வர் கூறுகிறார். இது குறித்து மக்களிடம் எடுத்து கூறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.  


 

Next Story

“அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது ஏன்?” - காங்கிரசுக்கு குமாரசாமி கேள்வி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

"Why field a candidate against him?" Kumaraswamy's question to Congress

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும்  இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகில் செங்கோல் ஒன்று நிறுவப்பட உள்ளது.

 

தொடர்ந்து திமுக, விசிக, மதிமுக உட்பட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் திறப்பு விழாவினை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே மோடி அரசு சீர்குலைத்துவிட்டது; குடியரசுத் தலைவர் ஒப்புதலின்றி நாடாளுமன்றமே செயல்பட முடியாது என்ற நிலை உள்ளபோது, அவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றத்தை திறப்பது அரசியலமைப்பை மீறும் செயல்" என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க ஆணையிடக் கோரியும்  புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதியை அழைக்காததின் மூலம் அரசியல் சட்டத்தை மக்களவைச் செயலகம் மீறி விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான குமாரசாமி, “இப்போது காங்கிரஸ் கட்சியினர் இந்திய ஜனாதிபதியின் மேல் மிகுந்த மரியாதையையும் பாசத்தையும் காட்டுகிறார்கள். பின் ஏன் ஜனாதிபதி தேர்தலின் போது அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார்கள். ஆதிவாசிகளை பாஜகவினர் இழிவு படுத்துகிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய செயல்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் சமூகத்தில் ஒரு பிரிவினரின் வாக்குகளைப் பெற மட்டுமே” எனக் கூறியுள்ளார்.