Skip to main content

ராணுவ வீரர்களுக்கு ராணுவ கிராம மக்கள் அஞ்சலி!

Published on 17/02/2019 | Edited on 17/02/2019

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு அருகே உள்ள மேல கோவில்பட்டியில் வீட்டுக்கு இரண்டு பேர் வீதம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு மூலம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த 44 ராணுவ வீரர்கள் தீவிரவாத தற்கொலை படையால் விபத்து ஏற்படுத்தி  கொல்லப்பட்ட சம்பவம் இந்திய நாட்டையே பெரும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

 

 Army villagers tribute to soldiers

 

அது போல் மேல கோவில்பட்டியில் வாழும் ராணுவ கிராம மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேல கோவில்பட்டியில் வாழும் மக்கள் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மேல கோவில்பட்டியில் உள்ள புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடந்தது.  

 

 Army villagers tribute to soldiers

 

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கு தந்தை ஜெயராஜ் தலைமையில் ஊர் மக்கள் ராணுவ வீரர்களின் படங்களுக்கு  மலர்அஞ்சலி செலுத்தினார்கள். அதுபோல் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையும் நடத்தினரார்கள். அதன்பின் ஊர்மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலமாக சென்று ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

12 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; மத்திய பாதுகாப்பு படை குவிப்பு

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

nn

 

கேரளாவில் சுமார் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சோதனையின் அடிப்படையில் மீண்டும் கேரள மாநிலத்தில் 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மலப்புரம், எர்ணாகுளம், வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. முன்னாள் நிர்வாகி ஜமால் முகமது, லத்தீப் உள்ளிட்டோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த பிறகும் அதன் நிர்வாகிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து உதவிகள் வருவதாகவும் கிடைத்த தகவல் அடிப்படையில் வங்கி கணக்குகள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

 

 

 

Next Story

''என் கணவரை ஏன் நல்லா பாத்துக்கல'' - தேசியக் கொடியை ஏந்தியபடி ராணுவ வீரர்களிடம் கேட்ட மனைவி 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

nn

 

ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், சக ராணுவ வீரர்களிடம் 'ஏன் என் கணவரை நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை' என ராணுவ வீரரின் மனைவி கண்ணீருடன் கேள்வி எழுப்பியது மனதை உறையவைத்தது.

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது மணலி கிருஷ்ணபுரம். இப்பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (34) எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்து கடந்த 15 வருடங்களாக திரிபுராவில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு சந்தியா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது சந்தியா மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

 

ஜெகதீஷ் கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் கமாண்டோ பயிற்சி பெற்று வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. அப்பொழுது சுற்றி இருந்த ராணுவ வீரர்களிடத்தில் 'ஏன் என் கணவரை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை ' எனக் கேட்டது அங்கிருந்த சக ராணுவ வீரர்களைக் கண்ணீரில் மூழ்க வைத்தது.