Skip to main content

பரோலில் வெளியேறி தப்பிய பாப்பையா கைது...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
vellore


 

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தவர் பெங்களூர் மாநிலம் பேகூர் பகுதியை சேர்ந்த சவுரப்பா என்பவரின் மகன் பாப்பையா. இவனுக்கு பாப்பு ராஜ்,  பாப்பு அண்ணன் என்றும் பெங்களூருவில் அழைப்பர்.

 

இவர் மீது கிருஷ்ணகிரி தளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வழிப்பறி கொலை கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை கிருஷ்ணகிரி போலிஸார் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

ஒரு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததால் சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார். இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பாக பரோலில் வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார், பரோல் முடிந்தும் சிறைக்குச் செல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் சுற்றித்திரிந்துள்ளார். இதுதொடர்பாக வேலூர் மத்திய சிறை நிர்வாகத்தினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். அதன் அடிப்படையில் போலிஸார் தலைமறைவானவனை தேடி வந்தனர். 

 

சுற்றி திரிந்தவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்தது. இவரைப் பிடிக்கும் பணியை திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பிரிவு டிஎஸ்பி ரவீந்திரன் உத்தரவின்பேரில் ஆய்வாளர் செல்வம் மற்றும் தலைமை காவலர்கள் ரமேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு டிசம்பர் 4 ந்தேதி இரவு பெங்களூர் பேகூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த பாப்பையாவை சுற்றிவளைத்து கைது  செய்தனர். பின்னர் அங்கிருந்து அவரை அழைத்துவந்து விசாரணை நடத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.