Skip to main content

14 வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி சூடு வைத்த கொடூரம்: கூட்டு பாலியல் வன்கொடுமை எனவும் புகார்

Published on 24/10/2018 | Edited on 24/10/2018


 

sexual harassment



தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சிறுமியை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
 

திருவையாறு பகுதியைச் சேர்ந்த சிறுமி செல்போனை திருடியதாக கூறி, அக்கம் பக்கத்தினர் ஐந்து பேர் அந்த சிறுமியை பிடித்து அடித்ததோடு, அந்த சிறுமியை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்ததாகவும், மரத்தில் கட்டப்பட்ட அந்த சிறுமிக்கு சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. 
 

அந்த ஐந்து பேரும் அந்த இடத்தில் இருந்து புறப்பட்ட பிறகு கட்டுகளை அவிழ்த்து, அந்த இடத்தில் இருந்து ஓடி வாழைத்தோப்பில் மறைந்து உயிர் தப்பி, வாழைத்தோப்பிற்கு வந்த ஒரு விவசாயி மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 

இந்த சம்பவம் தொடர்பாக திருவையாறு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை அளித்த புகாரில், தனது மகளை கடந்த ஆறு மாதங்களாக 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை அறிந்த அந்த சிறுவனின் உறவினர்களான மூன்று ஆண்களும் தனது மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.
 

பாலியல் வன்கொடுமை மற்றம் அடித்து துன்புறுத்தியதாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மகேந்திரன், வித்யா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 16 வயது சிறுவன் சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டான். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மகள்களை மிரட்டி பாலியல் தொந்தரவு; தந்தையின் கொடூர செயல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

sexual harassment of daughters by Father's in covai

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், தொழிலாளி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிறுமிகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன் தினம் (12-10-23) கோவை மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள், மாணவிகளிடம் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

 

அப்போது, தொழிலாளியின் இரண்டு மகள்களும் அழுதுகொண்டே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயிடம் எடுத்துக் கூறினர். இந்த தகவலை கேட்ட தாயும் அதிர்ச்சியடைந்தார். 

 

இதையடுத்து, சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தனது இரண்டு மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இதனை வெளியே கூறினால் சிறுமிகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததுள்ளார் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.