Skip to main content

ஆர்.கே.நகரில் வாகன சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்!

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
ஆர்.கே.நகரில் வாகன சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்!

சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை டிசம்பர் 4ஆம் தேதியோடு நிறைவடைகிறது. 

இதற்கு முன்பு இதே தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்தமுறை பணப்பட்டுவாடாவைத் தவிர்க்க தேர்தல் கமிஷன் பல கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.

அதன்படி, வெளியூர் மற்றும் உள்ளூர் வாகனங்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆர்.கே.நகர் வைத்தியநாதன் பாலம் பகுதியில் துணை ராணுவப்படையினர் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.



படங்கள் - குமரேஷ்

சார்ந்த செய்திகள்