Skip to main content

மெரினாவில் கடல்சீற்றம்; சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நடைமேடை

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

Sea rage at the marina; A platform for disabled persons with disabilities

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான 'மாண்டஸ்' சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Sea rage at the marina; A platform for disabled persons with disabilities

 

சென்னையில் பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை அருகில் கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட மேடை கடல் அலை சீற்றத்தால் சேதமடைந்துள்ளது.  அண்மையில் இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் பலர் கடலினை மிக அருகில் கண்டுகளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்