Skip to main content

காவிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அனைத்து சமூக மக்களும் ஓரணியாக திரளவேண்டும்: தமீமுன் அன்சாரி

Published on 18/04/2018 | Edited on 18/04/2018
thameem


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் ஒன்றிணைந்து, தேவாலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக, திமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும், தலைவர்களும் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியோ,

"நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார் என்ற உந்துதலில் காவி அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தேவாலயங்களை தாக்குகின்றார்கள்.

கிறிஸ்துவர்கள் தான் நம் நாட்டிற்கு கல்வியையும், மருத்துவமனைகளையும் கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் மூலம், வட இந்தியாவில் உள்ள பெரும்பாண்மை மக்களை அணித்திரட்டலாம் என நம்புகிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்.
 

and


ஆனால், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்ளுக்கும் பெரும்பான்மையான இந்து சமூதாய மக்கள் தான் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

இந்து ஏக்தா மர்ச் என்ற அமைப்பினர் காஷ்மீரில் கோவிலில் வைத்து 8 வயது குழந்தை ஆசிபாவை சீரழித்து இருக்கிறார்கள். இந்த படுபாவிகளுக்கு ஆதரவாக பாஜகவின் அமைச்சர்களே பேசுவதும், ஆதரவாக செயல்படுவதும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆனால், இந்த நாட்டில் உள்ள இந்துகளும், உலக மக்களும் இரக்கமற்ற அந்த கொடுமையை கண்டித்திருப்பதை பி.ஜே.பி நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு ஆறுதலாக இருக்கிறது.

காவிகளை வீழ்த்த, நாட்டை பாதுகாக்க எல்லா சமூக மக்களும் அணிதிரள வேண்டும்," என பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி! - காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

 Green flag rally in Tanjore! -Cauvery Rights Rescue Committee announcement!

 

இன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், திருவாரூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ம.ஜ.க பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ மு.தமிமுன் அன்சாரி, விவசாயச் சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் மருத்துவர் பாரதிமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 

இதில், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் உழவர் ஒழிப்புச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், எதிர்வரும் ஜனவரி 21 வியாழன் அன்று காலை, தஞ்சாவூரில் பிரம்மாண்ட பச்சைக் கொடி பேரணி நடத்துவது என்றும் முடிவானது.

 

அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் இந்தச் சட்டங்களின் பாதகங்களை விளக்கி துண்டுப் பிரச்சார பரப்புரை நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களும், போராட்ட ஆதரவாளர்களும், வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களும், வெளிநாடுவாழ் தமிழர்களும் அன்று காலை சமூக இணையதள வழியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில், ம.ஜ.க மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணிச் செயலாளர் அப்துல் சலாம், திருவாரூர் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எரவாஞ்சேரி நஜ்முதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

 

Next Story

'நிவர்' புயல் எச்சரிக்கை பணிகள்! - தொகுதியை ஆய்வு செய்த தமிமுன் அன்சாரி!

Published on 24/11/2020 | Edited on 25/11/2020

 

sdf

 

நிவர் புயல் கரையை நெருங்கும் நிலையில், மக்களை முன்னெச்சரிக்கையாக மீட்கும் பொருட்டு, நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி இரண்டு நாட்களாக தொகுதி முழுக்கச் சுற்றி வருகிறார்.

 

திருமருகல் ஒன்றியம் மற்றும் திட்டச்சேரி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தவர், தொடர்ந்து நாகை ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் செய்து முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார். மக்கள் தங்குவதற்கு, திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்களை ஏற்பாடு செய்ததோடு, ஒவ்வொரு ஊராட்சியிலும் மரம் அறுக்கும் இயந்திரம், பொக்லைன் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருக்குமாறு வி.ஏ.ஒ மற்றும் ஊராட்சி செயலாளர்களைக் கேட்டுக் கொண்டது கிராமப்புற மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

gh

 

நாகை, நாகூர் நகராட்சிப் பகுதிகளில் சாக்கடை தூர்வாரல், மின் கம்பங்களைச் சீரமைத்தல் போன்ற பணிகளைத் தீவிரப்படுத்தி, நகராட்சி ஆணையரிடம் இப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து, மேல் நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆங்காங்கே ரேஷன் கடைகளுக்கும் விசிட் செய்து பொருட்களின் வினியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அங்கு நின்ற மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்துள்ளார். பிறகு கடலோர மீனவ கிராமங்களுக்குச் சென்று, அவர்களின் நிலைகளைக் கேட்டறிந்து, படகுகளைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட அறிவுறுத்தியது மீனவர்களை நெகிழச் செய்துள்ளது.