Skip to main content

ஊரடங்கு நேரத்தில் மின் தடை...  20 கிராம மக்கள் அவதி  

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Power outage during curfew ... 20 villagers


இந்நிலையில் திருச்சியில் சமயபுரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் இரண்டு மணி நேரமாக 20 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மின்தடையால் அவதியுற்று வருகின்றனர்.

ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள  நேரத்தில் வெளியே வரவும் முடியாததால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்