Skip to main content

பொங்கல் டோக்கனுக்கு போட்டா போட்டி... முதியவர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

pongal goft Token in madurai

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் திட்டத்தை அறிவித்ததோடு துவக்கியும் வைத்திருந்தார். இந்நிலையில், இன்று (26/12/2020) முதல், ரேஷன் அட்டைதாரர்கள், ரூபாய் 2,500, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

 

பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை இன்று (26/12/2020) முதல், டிசம்பர் 30- ஆம் தேதி வரை வீடு தேடிச்சென்று ரேஷன் ஊழியர்கள் விநியோகிக்க உள்ளனர். ஜனவரி 4- ஆம் தேதி முதல் ஜனவரி 12- ஆம் தேதி வரை, ரூபாய் 2,500 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெறலாம். தமிழகத்தில் சுமார் 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, நல்ல துணிப்பையுடன், 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காயும் தரப்படும். வாங்காமல் விடுபட்டவர்கள் ஜனவரி 13- ஆம் தேதி பொங்கல் பரிசுத்தொகையுடன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் பொங்கல் டோக்கன் வாங்க போட்டா போட்டி நிலவியது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 1,389 நியாய விலைக்கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் மதுரையில் மட்டும்  9.26 லட்சம் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மதுரையில் இன்று பல நியாயவிலைக் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படவில்லை. இன்று அரிசி போன்ற பொருட்களின் விநியோகம் இருப்பதால், நேரத்திற்குத் தகுந்தபடி பொங்கல் டோக்கன் வழங்க ஊழியர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ஜம்புராபுரம் பகுதிக்கு பொங்கல் பரிசு டோக்கன் வழங்க ஊழியர்கள் சென்றனர்.

 

இந்நிலையில் அவர்களை சூழ்ந்த மக்கள் கூட்டம் கரோனா, சமூக இடைவெளி என அனைத்தையும் மறந்து முண்டியடித்துக்கொண்டு போட்டா போட்டியுடன் டோக்கனை வாங்க முற்பட்டனர். வயதானவர்கள் சிலர் கீழே விழுந்தனர். கூச்சல் அதிகம் கிளம்ப, டோக்கன் வழங்கவந்த ஊழியர்கள் டோக்கனை கொடுக்காமலே பாதியில் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.