Skip to main content

ஆளும் கட்சி முக்கிய புள்ளி கடத்திய 3 டன் குட்கா !  ஆளை மாத்திய அமைச்சர் ! 

Published on 15/01/2019 | Edited on 15/01/2019
ku

 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து கரூருக்கு வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் என்ன லோடு என கேட்க, அதை ஓட்டி வந்த டிரைவர் முரணாக பதில் சொல்ல சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். 

 

அப்போது லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவர் தொட்டியம் காட்டுப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினர்.

 

அப்போது அவர் கரூர் ராயனூரை அடுத்த வெள்ள கவுண்டர் பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதன் அடிப்படையில் அதிமுக கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 3 டன் குட்கா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். சம்மந்தப்பட்ட இடம் கரூர் மாவட்டம் தாந்தோணிமலை போலீஸ் சரகத்திற்கு வருவதால் இது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கரூர் டவுன் டிஎஸ்பி கும்ம ராஜா, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் குடோனை திறந்து உள்ளே இருந்த சுமார் 3 டன் குட்கா பொருட்கள் இரண்டு மினி லாரிகளில் ஏற்றி ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.

 

இதனால் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய போலிஸ் முயற்சி செய்த போது கரூர் அமைச்சர் தலையிட்டு ஆளை மாத்தி வழக்கு போடுங்கள் என்று சொல்ல கடைசியில் போலிஸ் ஜெயராஜ்க்கு சொந்தமான இடத்தை தங்கராஜ் என்பவருக்கு வாடகைக்கு விட அதில் தங்கராஜ் குட்கா குடோன் வைத்திருந்தாக வழக்கு பதிவு செய்து ஆளை மாத்தினார்கள். 

 

ஆளும் கட்சி குட்கா கடத்திய வழக்கில் அமைச்சர் உள்ளே புகுந்து ஆளை மாத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலத்தில் 540 கிலோ குட்கா பறிமுதல்; 4 பேர் கைது

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

540 kg gutka seized in Salem; 4 arrested!

 

சேலத்தில், ஒரே இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 540 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

 

சேலத்தில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ், பான் பராக் உள்ளிட்ட போதையூட்டக் கூடிய புகையிலை பொருள்களை விற்பனை செய்வோர், பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், சேலம் சூரமங்கலம் ஸ்டேட் வங்கி காலனியில் தேநீர் கடை நடத்தி வரும் சிவக்குமார் (வயது 49) என்பவர், ஹான்ஸ் போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறை உதவி ஆணையர் நாகராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 

அதன்பேரில், சூரமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்ட தேநீர் கடையில் சோதனை நடத்தினர். அவருடைய கடையில் இருந்து ஹான்ஸ் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

 

விசாரணையில், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்த சாதிக் அலி (வயது 39) என்பவர் பெங்களூருவில் இருந்து ஹான்ஸ், குட்கா போதைப் பொருள்களை தருவித்து, சிவக்குமார் உள்ளிட்ட சேலத்தில் பலருக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது. 

 

இதையடுத்து சாதிக் அலி மற்றும் அவருடைய கூட்டாளிகளான திரு நகரைச் சேர்ந்த நஸ்ருதீன் (வயது 46), ஓமலூர் கோட்டக்காட்டைச் சேர்ந்த ரசாக் (வயது 47) ஆகியோரை கைது செய்தனர். 

 

அவர்கள் வெண்ணங்கொடி முனியப்பன் கோயில் அருகே ஓரிடத்தில் பதுக்கி வைத்திருந்த 540 கிலோ குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் ஆகும். 

 

 

Next Story

திமுக எம்.எல்.ஏ.க்களின் வாதமே என் வாதம் என கு.க.செல்வம் முறையீடு! -வழக்கு நடந்தபோது ஆஜராகவில்லை என மனு தள்ளுபடி!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
chennai high court

 

 

சட்டமன்றத்துக்கு குட்கா எடுத்து வந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த வழக்கில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வாதத்தையே தன் வாதமாக ஏற்றுக்கொள்ளுமாறு,  சமீபத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததையடுத்து, அவர்களுக்கு எதிராக  உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

 

உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. தடையை நீக்கக்கோரி தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்தது. இந்த அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் விசாரிக்கப்பட்டன. 

 

அப்போது தி. மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டதாகவும், கு.க.செல்வத்துக்கு தாங்கள் ஆஜராகவில்லை எனவும் தெரிவித்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் சார்பில் தலைமை நீதிபதி அமர்வில்  அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. சட்டசபையில் குட்கா கொண்டு வந்ததற்காக, உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியது தொடர்பான வழக்கில், தி.மு.க.வின் மற்ற உறுப்பினர்களின் வாதங்களையே தன் தரப்பு வாதமாக எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இந்நிலையில், வழக்கு விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதாலும், விசாரணை நடைபெற்ற மூன்று நாட்களும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததாலும், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்த நீதிபதிகள், தி.மு.க தரப்பு வாதத்தையே கு.க. செல்வம் தரப்பு வாதமாக பதிவு செய்துகொள்ளக்கோரி மனு  தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.