Published on 06/06/2022 | Edited on 06/06/2022
பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கிய இளைஞரைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 12- ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியைத் திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதில், சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமான நிலையில், இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தால், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.