Skip to main content

டிஎன்பிஎஸ்சியில் பெரியாருக்கு எதிரிகள் இருக்கிறார்களா?

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

தனது வாழ்நாளெல்லாம் சாதி ஒழிப்புப் போராளியாக வாழ்ந்து மறைந்த தந்தை பெரியாரை, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் இடம்பெற்ற ஒரு கேள்வியில் ஈ.வெ.ராமாசாமி நாயக்கர் என்று சாதிப்பெயருடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

pp

 

 

இது தற்செயலாக நிகழ்ந்ததாக யாரும் கருதிவிட முடியாது. திட்டமிட்டே இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.


 

ஒரு காலத்தில் பிறக்கிற குழந்தைக்கு பெயர் வைக்கும்போதே சாதி என்ற வாலும் சேர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும். அப்படித்தான் தந்தை பெரியாரின் இயற்பெயர் எனும்போதே ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆக இருந்தது. 1929 ஆம் ஆண்டு அவரே தனது பெயருக்கு பின் ஒட்டியிருந்த நாயக்கர் என்ற சாதிப்பெயரை வெட்டி எறிவதாக அறிவித்தார்.


 

அவர் மட்டுமல்ல, தியாகராய செட்டியார் உள்ளிட்ட பெருந்தலைவர்களும் சாதிப்பெயரை நீக்குவதாக அறிவித்தார்கள். அப்போதிருந்து தமிழ்நாட்டில் சாதிப்பெயரை இணைத்து பள்ளிகளிலும், மற்ற பொது இடங்களிலும் பெயரை பதிவு செய்யும் பழக்கம் கேவலமாக பார்க்கப்பட்டது.


 

ஆனால், சாதி அமைப்பை, வர்ணாச்சிரம முறையை ஆதரித்த ராஜகோபாலாச்சாரியார், மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி ஆகிய தலவர்கள் பெரியாரின் இந்த தீர்மானத்துக்கு எதிராக இருந்தார்கள். உண்மை இப்படி இருக்கும்போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஒரு கேள்விக்குரிய பதில்களாக நான்கு பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.


 

அதாவது, திருச்செங்கோட்டில் ஆசிரமம் அமைத்தவர் என்ற கேள்விக்கு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ராஜாஜி, காந்திஜி, சி.என்.அண்ணாதுரை என்று நான்கு தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.


 

இந்த வினாவைத் தயாரித்தவரின் நோக்கம் என்ன தெரியுமா? ராஜகோபாலாச்சாரி என்று கடைசிவரை கையெழுத்துப்போட்டவரை ராஜாஜி என்றும், மோகன்தாஸ் காந்தி என்று கையெழுத்திட்டவரை காந்திஜி என்று மக்களுக்கு அறிந்த பெயர்களால் குறிப்பிடுகிறார். அதேசமயம், தானே வெட்டி எறிந்த சாதிப் பெயரை இணைத்து தந்தை பெரியார் என்று மக்களால் அழைக்கப்படுகிறவரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றும், அறிஞர் அண்ணா என்று மக்களால் அழைக்கப்படுகிறவரை சி.என்.அண்ணாதுரை என்றும் குறிப்பிடுவதன் மூலம் அவர்களை சிறுமைப்படுத்த மறைமுகமாக முயன்றிருக்கிறார்.


 

தமிழக அரசில் இத்தகைய கருப்பாடுகளின் நோக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பொறுப்புகளில் திணிக்கப்பட்டுள்ள இத்தகைய விஷ எண்ணம் கொண்ட அதிகாரிகளை களையெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.