Skip to main content

"மீண்டும் பயணிகள் ரயில் சேவை"- தெற்கு ரயில்வே அறிவிப்பு! 

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

"Passenger train service again" - Southern Railway announcement!

 

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில பயணிகள் ரயில்கள், மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 

மே 30- ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து காலை 06.35 மணிக்கு ராமேஸ்வரத்திற்கும், மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு மதுரைக்கும் ரயில் இயக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து காலை 07.10 மணிக்கு நெல்லைக்கும், மறுமார்க்கத்தில் மாலை 06.45 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. 

 

அதேபோல், மே 23- ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு கோவைக்கும், மறுமார்க்கத்தில் மாலை 03.45 மணிக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் ரயில் சேவைத் தொடங்குகிறது. மே 30- ஆம் தேதி முதல் நெல்லையில் இருந்து மாலை 06.15 மணிக்கு செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து காலை 06.40 மணிக்கு நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 

 

இந்த ரயில்கள் அனைத்தும் முன்பதிவில்லா விரைவு ரயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் (படங்கள்)

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி முதலில் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

 

Next Story

“தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் அடிமைகளாக வாழும் நிலை உருவாகும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

pmk leader anbumani ramadoss said Tamils will live as slaves in Tamil Nadu about railway job

 

“தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தேர்வாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இப்படியே போனால் தமிழ்நாட்டிலேயே  தமிழர்கள் அடிமைகளாக வாழும் நிலை உருவாகும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு ரயில்வே துறையில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தேர்வாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயத்தை இது எழுப்பியிருக்கிறது.

 

தெற்கு தொடர்வண்டித்துறை, ஐ.சி.எஃப் எனப்படும் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு கூட்ஸ் கார்டுகள், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், முதுநிலை வணிகம் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ஐந்தாம் நிலை மற்றும் ஆறாம் நிலை பணிகளுக்கு, சென்னையிலுள்ள தொடர்வண்டிப் பணியாளர் வாரியம் மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 2020-ஆம் ஆண்டு திசம்பர் 28-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு திசம்பர் 12 வரை நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிந்த பிறகு 964 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 200 பேர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. 750-க்கும் மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்களைத் தேடித்தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக, பட்டியலில் பாண்டேக்கள், சவுத்திரிகள், சவுகான்கள், மீனாக்கள், பிஸ்வாஸ்கள், குமார்கள் தான் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள். தெற்கு தொடர்வண்டித்துறை,  தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுவையின் அனைத்துப் பகுதிகள், கேரளத்தின் சில பகுதிகள், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தின் ஓரிரு நகரங்கள் ஆகியவற்றில் தான் பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும், அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால், 80% பணியிடங்களுக்கு வட இந்தியர்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவரே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. இது இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது.

 

பல்வேறு பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களின் பட்டியலைப் பார்க்கும் போது வட இந்திய விண்ணப்பதாரர்களுக்குச் சாதகமாக முறைகேடுகள் நடந்திருக்குமோ? என்ற ஐயம் எழுகிறது. எடுத்துக்காட்டாக கூட்ஸ் கார்டு பணிக்கு வரிசை எண் 54 முதல் 67 வரை தொடர்ச்சியாக மீனாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இளநிலை கணக்கு உதவியாளர் பணியில் வரிசை எண் 70 முதல் 90 வரை தொடர்ச்சியாக 21 இடங்களைப் பிடித்திருப்பவர்கள் மீனாக்கள் தான். அதே பணிக்கு வரிசை எண் 149-163, 201-214 வரையிலான 29 இடங்களில் 28 இடங்களைக் கைப்பற்றியிருப்பவர்கள் குமார் என்ற குடும்பப்பெயர் கொண்ட வட இந்தியர்கள் ஆவர். எந்தப் பணிக்கும் தமிழர்கள் தொடர்ச்சியாக 4 பேர் கூட தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், வட இந்தியர்கள் மட்டும் கொத்துக்கொத்தாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

 

தொடர்வண்டித்துறையாக இருந்தாலும், வங்கிப்பணிகளாக இருந்தாலும், அஞ்சல் துறையாக இருந்தாலும், என்.எல்.சி நிறுவனமாக இருந்தாலும் பொதுத்துறை நிறுவனப் பணிகளின் வேலைவாய்ப்புகள் முழுக்க முழுக்க வட இந்தியர்களால் தான் கைப்பற்றப்படுகின்றன. தேர்வு முறையும், தேர்வு மைய கண்காணிப்பும் இதற்குச் சாதகமாக வடிவமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இவற்றைக் கடந்து தமிழக அரசுப் பணிகளிலும் வட இந்தியர்கள் நுழையத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு, பொதுத்துறை பணிகளில் 80 முதல் 90 விழுக்காட்டையும், தமிழக அரசுப் பணிகளில் சிலவற்றையும் வட இந்தியர்கள் பறித்துக் கொண்டால், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு கருகி விடும்.

 

அரசுப் பணிகள் இப்படி என்றால், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பும் தமிழர்களுக்குத் தான் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஓசூர் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வட இந்தியப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்த்து விட்டு, தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது தான் இதற்கு எடுத்துக் காட்டு ஆகும். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் அமைப்பு சார்ந்த வேலைகள் அனைத்தும் வட இந்தியர்கள் வசமாகி விடும் ஆபத்து இருக்கிறது. அது நடந்தால் தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் அடிமைகளாக வாழும் நிலை உருவாகும். அத்தகைய நிலையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக....

 

1. பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்படும் வகையில் 100% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

 

2. மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் பணியிடங்களில் 50% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

 

3. தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் கொண்டு வரப்பட்டிருப்பதைப் போன்று, பிற தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் பாடத் தாள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

 

4. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பெரு நிறுவனங்களின் அமைப்பு சார்ந்த பணிகளில் 80 விழுக்காட்டை  தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.