Skip to main content

ஒபிஎஸ் மகனுக்கு எம்.பி.சீட்டு கேட்டு 20 பேர் விருப்பமனு! சூடுபிடிக்கும் தேனி தொகுதி!!

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

பாராளுமன்றத் தேர்தல் வரை இருப்பதையொட்டி தமிழகத்தில் முதன்முதலில் ஆளும்கட்சியான அதிமுகதான் பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடுபவர்கள் விருப்பமனு கொடுக்கலாம் என அதிரடியாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதி முதல் வருகிற 10ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் ஒரு தொகுதி பாண்டிச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் போட்டி போட விருப்பமுள்ள அதிமுகவினர்  தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம் என அறிவித்திருந்தது.

 

ops son politics in theni admk

 

அது தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய கட்சிப் பொறுப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அதுபோல் துணைமுதல்வர் ஓபிஎஸ்  சொந்த மாவட்டமான தேனி பாராளுமன்ற தொகுதிக்கு மாவட்ட செயலாளர் சையதுகான்,  மாவட்ட துணைச் செயலாளர் முறுக்கோடை ராமர் உள்பட மாவட்ட பொறுப்பாளர்கள் பணம் கட்டி இருக்கிறார்கள். இதில் முக்கிய விஐபியான ஓபிஎஸ் மகன்  ரவீந்திர நாத்தும் சீட்டு கேட்டு  விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதுபோல் தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் போட்டி போட வேண்டும் என ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்களான  அரண்மனை புதூர்சுப்பு.முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.டி.கணேசன், நாகலாபுரம் முருகேசன்,  பி.சி.பட்டி தீபன் சக்கரவர்த்தி, மதுரை ராஜ்மோகன் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள்  விருப்ப மனு தாக்கல் செய்தும் இருக்கிறார்கள். அதுபோல் தங்களுக்கும் சீட்டு கேட்டு பணம் கட்டி இருக்கிறார்கள்.

      

ops son

 

இது சம்பந்தமாக தேனி மாவட்டத்திலுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது..... கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே அண்ணன் ஒ பி.எஸ் அம்மாவிடம் மகன் ரவீந்திரநாத்துக்கு சீட் கேட்டார். ஆனால் அம்மா அப்பொழுது கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக அண்ணனின் தீவிர ஆதரவாளரான பார்த்திபனுக்கு  சீட் கொடுத்து வெற்றி பெறவைத்தார்.

 

ops son politics in theni admk

 

அதனால் இந்த முறை பார்த்திபன் தேர்தலில் போட்டி போட விருப்பமில்லை என பேச்சு அடிபட்டு வருகிறது.  எனவே தான் ரவீந்திரநாத்துக்கு சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி விருப்ப மனு கட்டியிருக்கிறோம். கடந்த ஒரு  வருடங்களாகவே ரவீந்திரநாத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததின் பேரிலதான் கடந்த ஏழு மாதத்துக்கு முன்பு மாவட்ட ஜெ பேரவை  செயலாளர் பதவியை ரவீந்திர நாத்துக்கு வழங்கினார்கள். அதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அண்ணன் ஓபிஎஸ்சுடன் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கட்சிப் பணி ஆற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வருவதால்தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டி போட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். அதனால் தான் நாங்களும் ரவீந்திரநாத் சீட் கொடுக்க வேண்டும் என இருபதுக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறோம். தற்போது அண்ணன் ஒபிஎஸ்சுடன் தான் தொடர்ந்து அரசியலில் இருந்து வருகிறார். அதன் மூலம் வரும் பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்துக்கு அவசியம் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறோம் என்று கூறினார்கள்.

 

ஆக பாராளுமன்றம் தேர்தல் வருவதற்குள்  தமிழகத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி தான் அரசியல் களத்தில் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.