Skip to main content

ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

One of the helicopter brothers admitted to hospital!

 

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் என்கிற பெயரில் பல கோடி மோசடி செய்து தலைமறைவான பாஜக பிரமுகர்கள் கணேஷ் மற்றும் சுவாமிநாதனை போலீஸார் கடந்த 6ஆம் தேதி கைது செய்தனர். 

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் தீட்சதர் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள். இவர்கள் விக்டரி என்கிற பெயரில் நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு மாடுகளைக் கொண்டு மூன்று இடங்களில் பால் பண்ணை, ஹெலிகாப்டரை வாடகைக்கு விடுவது எனப் பல தொழில்களை செய்துவந்தனர். சகோதரர்கள் எப்போதும் ஒன்றாகவே ஹெலிகாப்டரில் வலம்வந்ததால், இவர்களை ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்ற பெயரிலேயே பலரும் அழைத்தனர்.

 

One of the helicopter brothers admitted to hospital!

 

இவர்களது நிதி நிறுவனத்தில், ஒன்று கொடுத்தால் மூன்று என்பது போல கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து, பலதரப்பட்ட மக்கள் கோடிக்கணக்கில் முதலீடாக கொடுத்த பணத்தை ஏமாற்றியதாகப் புகார்கள் எழுந்த நிலையில், பாதுகாப்புக்காக பாஜகவில் ஐக்கியமாகி பல கூட்டங்களில் கலந்துகொண்டதோடு, வேல் யாத்திரை வந்த அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு உபசரிப்பு செய்து அவருக்கு லட்சக்கணக்கான நிதியும் கொடுத்ததாக அப்போது பாஜகவில் பேசப்பட்டது. அதேபோல் கருப்பு முருகானந்தம், எச். ராஜா உள்ளிட்டவர்களும், இந்தச் சகோதரர்களோடு நெருக்கமாக இருந்தனர் என்ற தகவலும் வெளியாகின. புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த இரண்டு சகோதரர்களையும் கடந்த 06.08.2021 அன்று போலீசார் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மற்றொரு ஹெலிகாப்டர் சகோதரரான கணேசனும்  உடல்நலக்குறைவால் சுவாமிநாதன் சிகிச்சை பெற்றுவரும் அதே புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள கணேசனுக்கும் கரோனா தொற்று இருக்குமோ என மருத்துவர்கள் பரிசோதனை செய்துவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்