Skip to main content

ஒபிஎஸ் தொகுதியில்  பற்றி  எரியும் மலை  - அதிகாரிகளின் மெத்தனம்!

Published on 11/03/2018 | Edited on 11/03/2018

 

ops


துணை முதல்வரான ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் தான்  மேற்கு தொடர்ச்சி  மலை உள்ளது. இந்த மலையின் மேற்கில் தான்  போடி தொகுதி  வருகிறது.  அதாவது போடியில் இருந்து  மூணாறு  செல்லும் போடி மெட்டு வரை மேற்கு  தொடர்ச்சி மலை பரந்து விரிந்து காணப்படும்.


         இப்படிபட்ட மேற்கு தொடர்ச்சி மலையில்தான்  விலை உயர்ந்த  பல சாதிமரங்கள் மற்றும்  புலி, சிறுத்தை, மான்,  யானை, காட்டு எருமை  இப்படி பல வகையான  விலங்குகள், குரங்குகள், பறவைகள், இருக்கிறது. அதுபோல்  மூலிகைகளும் இப்பகுதியில்  பரந்து விரிந்து கிடக்கிறது.

 

 இந்த நிலையில் தான்  கடந்த மூன்று நாட்களாக  மூணாறு செல்லும் வழியான போடி மெட்டு பகுதியில்  காட்டு தீ பரவி வனத்தவே அழித்து  வருகிறது.  அதன் மூலம்  வனவிலங்குகள்  மற்றும் பல சாதி மரங்களும் காற்றுதீக்கு இறையாகி வருகிறது.  

 

இந்த  விஷயம் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் காதுக்கு எட்டவே உடனே போடி அருகே உள்ள முந்தல் கிராமத்திற்கு ஆர்.டி.ஒ.சென்னியப்பன் தலைமையில் அதிகாரிகளை உசிப்பி விட்டு போக சொன்னவர் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என்றும்  அறிவுறுத்தினார். அதுபோல்  அதிகாரிகளும் அப்பகுதி மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தி வனத்தை காப்போம் என உறுதி மொழியும் எடுத்து இருக்கிறார்கள். இருந்தாலும் பரவி வரும் காற்று தீயை அணைக்க  எந்த ஒரு  நடவடிக்கையும்  எடுக்காமல் மெத்தன போக்கவே கடைபிடித்து வருகிறார்கள் .  இதனால் தொடந்து  காட்டு தீ  மேற்கு தொடர்ச்சி மலையில்  எரிந்து  கொண்டு தான் இருக்கிறதே தவிர  அதை கட்டுப்படுத்த  அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கவே கடைபிடித்து வருகிறார்கள். இதனால் தொடந்து நான்காவது நாளாக  காட்டு தீ எரிந்து வனத்தை அழித்து வருகிறது.  இதை துணை முதல்வரான ஒபிஎஸ்சும் கண்டு கொள்ளவில்லை  என்பதுதான் வேதனையாக இருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி-ஐந்து ஒன்றியமாக பிரிக்கப்பட்ட தொகுதி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
End of DMK party tussle- Constituency divided into five unions

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக கைப்பற்றியதில் மூன்றாவது முறையாக தேன்மொழி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட ஆளுங்கட்சியான அந்தப்பகுதி திமுகவினர் இத்தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வம் கட்டாமல் தங்களுக்குள் கோஷ்டி பூசலை உருவாக்கிக் கொண்டு கட்சியை வளர்க்கவும் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே அறிவாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த நிலக்கோட்டை தொகுதியில் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை என இரண்டு யூனியன்கள் உள்ள. இந்த யூனியன்களுக்குட்பட்ட பகுதிகளை 5 ஒன்றியங்களாக பிரித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வத்தலக்குண்டு ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு வத்தலக்குண்டு வடக்கு, வத்தலக்குண்டு தெற்கு என புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகள், 8 ஊராட்சிகள் அடங்கிய வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக கே.பி. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 9 ஊராட்சிகள் அடங்கிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெற்கு ஒன்றியத்திற்கு கனிக்குமார் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

End of DMK party tussle- Constituency divided into five unions

இதேபோல் நிலக்கோட்டை யூனியனை மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் நிலக்கோட்டை பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை அடங்கிய பகுதிக்கு மணிகண்டன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் 7 ஊராட்சி ஒன்றியங்களாக சுருக்கப்பட்டு ஒன்றிய பொறுப்பாளராக சௌந்தரபாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு நீண்ட நாள் போராடி வந்த கரிகால பாண்டியனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கு ஒன்றியம் என ஒரு கட்டமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மற்றும் 7 ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளுக்கு கரிகால பாண்டியன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் திமுக அதிக அளவில் வாக்குகளை பெற்றுத் தர வேண்டும். பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் திமுக கொடி பறக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காகவே கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றியங்களை பிரித்து புது வியூகத்தை உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்க ஆளும் கட்சியான திமுக தயாராகி வருகிறது.

Next Story

தென்காசியில் வெற்றி பெற்றது யார்? வெளியான மறுவாக்கு எண்ணிக்கை முடிவு

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Who won Tenkasi; Re-vote count results released

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் என்பவர் போட்டியிட்டார். அதில் பழனி நாடார், செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்ததுள்ளது. எனவே பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தது.

 

அதன்படி தென்காசி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மறு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. தேர்தல் அலுவலராக தென்காசி உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டார். காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்ற நிலையில் 20 நிமிடம் தாமதமாகக் காலை 10.20 மணிக்கு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட்டார். இந்நிலையில் மீண்டும் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.