Skip to main content

குற்றாலம் வந்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை நேற்று இரவு வரை 13 ஆக இருந்தது. இன்று அதிகாலை சுமார்  மூன்று மணி அளவில் குடியாத்தம் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாதனும், பின்னர் ஆறு மணிக்கு எம்.எல் .ஏ ஏழுமலை இருவரும் வந்தனர்.  இதனால் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இத்துடன் நிலக்கோட்டை எம்.எல்.ஏவும் இன்னொரு எம்.எல்.ஏவும் தாங்கள் குடும்ப சூழல் காரணமாக அங்கு வரமுடியாத நிலை இருக்கிறது என்று தங்கத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏவுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

ttv

 

 இதனிடையே இன்று காலையில் தங்கத்தமிழ்செல்வன், எம்.எல்.ஏ மாரியப்பன், பிரபு மற்றும் பாதுகாவலர்களுடன் ஐந்தருவி சாலையில் நடைபயணம் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கத்தமிழ்செல்வன், 

 

போலீஸ் பயம் காரணமாக 18 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் தங்கியுள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை ஓய்விற்காக வந்த நாங்கள் தாமிரபரணியில் புஷ்கர நீராடினோம். முதலில் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்கட்டும் பின்னர் பேசட்டும். தீர்ப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது அதை கண்டு நாங்கள் கலங்குவதில்லை. எங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை அரசும் செய்யவில்லை, எங்களையும் அரசு செய்யவிடவில்லை. எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. தீர்ப்பு பாதமாக வந்தால் எங்கள் ஆட்சி தொடரும் என்று சொல்கிறார்கள் ஆனாலும் அம்மா ஆட்சி வரும் அதில் 5 அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் ஓபிஎஸ்ஸைதான் டிடிவி முதலமைச்சர் ஆக்கினார், பின்னர் சின்னம்மா எடப்பாடியை முதல்வராக்கினார். தீர்ப்பு எப்படி வரும் என்று தெரியாது. டிடிவி தினகரன் அநேகமாக வரும் 27-ஆம் தேதி குற்றாலம் வர உள்ளார். அதற்குள் தீர்ப்பு வந்தால் நாங்கள் சென்னை சென்றுவிடுவோம் என்றார் தங்கத்தமிழ் செல்வன். 

 

இதை அடுத்து தங்கத்தமிழ்செல்வனும் எம்.எல்.ஏ மாரியப்பனும் 11.30 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் இருக்கும் மன்னர் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை மரியாதையை செலுத்துவதற்காக கிளம்பி சென்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.