Skip to main content

கேள்வி கேளுங்க... ஏன் வரலன்னு கேளுங்க... - நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்: நெடுவாசலில் நிர்மலா சீதாராமன் பேச்சு

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
Nirmala Sitharaman


கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றார். 
 

அப்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்பு பேசிய அவர், நகரப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுங்கள். மத்திய, மாநில அரசுகளிடம் கலெக்டர் அதனை தெரிவிப்பார். தேவையான உதவிகள் கிடைக்க மத்திய அரசு ஒத்துழைக்கும். 
 

தென்னை விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் எவ்வளவு தென்னங்கன்றுகள் விழுந்துள்ளது, வாழைகள் விழுந்துள்ளது என்பதை கணக்கெடுத்து கலெக்டரிடம் மனு கொடுங்கள். விழுந்த மரங்களை அகற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுப்பார்கள். தென்னை, வாழை மரங்களின் சேதத்தை பார்க்க வேளாண்துறை குழு தமிழுகம் வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 
 

தமிழகத்தில் போதிய தென்னங்கன்றுகள் இல்லையெனில் பிறமாநிலங்களில் இருந்து எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அந்தமானில் இருந்தும் தென்னங்கன்றுகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்படும். தென்னை வளர்ந்து காய் காய்க்கும் வரை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் பருப்பு போன்ற பயிற்களை வைக்க அதிகாரிகள் உதவி செய்வார்கள். தென்னை, வாழை, வீடு பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேன். 
 

மின்சாரம் இன்னும் நம்ம வீட்டுக்கு வரவில்லை. மாநில அரசு முயற்சி செய்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. நேற்று நாகப்பட்டிணத்தில் மின்சாத்துறை அமைச்சரை பார்த்தேன். முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் என்றார். 
 

அதுவரை மக்களுக்கு தேவையான கெரசின் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மின்சாரம் வரும்வரை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள். நாளடைவில் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. அவைகள் பிரதமர் மூலமாகவே நடைபெறும். 
 

மத்திய அரசு மூலமாகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய உதவிகள், நீண்ட நாட்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும் என்று சொல்லத்தான் வந்திருக்கிறேன். 
 

இந்தப் பகுதி மக்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. நான்கு, ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்படையாக நாம் சொன்னது தஞ்சாவூர். இங்கிருந்து சோழர்கள் எங்கெல்லாமோ போய் பிரகதீஸ்வரர் கோவில் போன்று பெரிய பெரிய கோவில்களை கட்டியுள்னர். கம்போடியாவில், இந்தோனேஷியாவில் கட்டியிருக்கிறார்கள். இங்கிருந்து சென்றவர்கள்தான். 
 

இங்கிருந்துதான் நாடு முழுக்க தேவையான அரிசியை அனுப்பி வைத்திருக்கிறீர்கள். தஞ்சாவூர்தான் நம்ம நாட்டுக்கே களஞ்சியம். அப்படிப்பட்ட இந்த பகுதிக்கு பெயர், புகழ் வாங்கிக்கொடுத்த நீங்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது. 
 

கேளுங்க. கேள்வி கேளுங்க. ஏன் வரலன்னு கேளுங்க.  நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது எப்படி பேசினாலும் நாங்க தப்பா எடுத்துக்கொள்ள மாட்டோம். நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு இருக்கிறது. மாநில அரசும் எங்களுக்கு ஒத்துழைக்கிறது. இந்த கஷ்ட நேரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு கசிந்து பேச வேண்டாம். மனசு வேதனைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். உதவி கண்டிப்பாக உங்களை தேடி வரும். நீங்க கேட்கும் உதவி வரும். தைரியமாக இருங்கள். நம்பிக்கையை இழக்க வேண்டாம். 
 

விவசாய காப்பீடு திட்டம். அதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும். நாளைக்குள் கட்ட முடியாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மாநில அரசுக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். எத்தனை விவசாயிகள் கட்ட முடியாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு மாநில அரசே அதற்கான தொகையை கட்டிவிட்டு, பின்னர் இழப்பீட்டு தொகை வரும்போது அந்த தொகையை கழித்துவிட்டு கொடுத்துவிடுங்கள். அதனைவிட்டு ஏன் அவர்களை அலைய விடுகிறீர்கள் என்று சொன்னேன். மாநில அரசு அதனை செய்ய வேண்டும். நாங்களும் மத்திய அரசிடம், விவசாயிகளுக்கான தொகையை சீக்கிரம் கொடுங்கள் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறினார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.