Published on 24/10/2019 | Edited on 24/10/2019

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
ஏற்கனவே கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தமிழர்களின் பெருமை மற்றும் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய நான்கு இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.