Skip to main content

மீனவர்களின் குறைக்கேட்க மறுத்து பாதியில் புறப்பட்ட நாகை மாவட்ட ஆட்சியர்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

தேசிய மீன் வளர்ப்போர் தினத்தையொட்டி நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த மீன்வளத் துறை அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியில்  மீன் இறால் வளர்ப்பு விவசாயிகளிடம் குறைகள் எதுவும் கேட்காமல் பாதியில் வெளியேறியதால் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீன் இறால் வளர்ப்பு விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்ததோடு நிகழ்ச்சியிலிருந்து கூட்டமாக வெளிநடப்பும் செய்தனர்.  
 

மாவட்ட நிர்வாகம் கண்துடைப்புக்காகவே நிகழ்ச்சியை நடத்துவதாக மீன்இறால் வளர்ப்பு விவசாயிகள் குறைபட்டுக்கொண்டனர். தேசிய மீன் வளர்ப்போர் தினத்தையொட்டி நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த மீன்வளத் துறை அலுவலகத்தில் மீன், இறால் வளர்ப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. அந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அங்கு அமைக்கப்பட்டிருந்த மீன், இறால் வளர்ப்பு கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய மீன் வளர்ப்போர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
 

நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மீன் இறால் வளர்ப்பு விவசாயிகளிடம் கருத்துக்கள் மற்றும் குறை, நிறைகள் எதுவும் கேட்காமல் பாதி கூட்டத்திலேயே வெளியேறினார். அதைக்கண்டு ஆத்திரமடைந்த மீன் இறால் வளர்ப்பு விவசாயிகள் மீன்வளத் துறை அதிகாரிகளிடம்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நிகழ்ச்சியிலிருந்து கூட்டமாகவும் வெளியேறினர் . 
 

நாகை மாவட்டத்தில் பண்னை குட்டைகளில் மீன் மற்றும் இறால்  வளர்ப்பு செய்யும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரங்களை தூர் வாரி  கடல் தண்ணீரின் உப்புத் தன்மை ஆறுகளில் ஏறி கலப்பதை (Back water) மூலம் ஆற்று நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளுர், கடலூர் மாவட்ட இறால் பண்ணை விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல நாகை மாவட்ட இறால் பண்ணை விவசாயிகளுக்கும் மான்ய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், இறால் பண்ணை விவசாயிகளுக்கு கால தாமதமின்றி லைசன்ஸ் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு வேட்டைகாரனிருப்பு, கள்ளிமேடு, புதுப்பள்ளி ஆற்று முகத்துவாரங்களில் ஜெட்டி அமைக்க வேண்டும் என மீன், இறால் வளர்ப்பு விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.