Skip to main content

மர்மமான முறையில் பெண் சடலம்..! கொலையாளியை பிடித்த காவல்துறையினர்..! 

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

Mysterious female corpse ..! police caught accused

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ளது பால்ராம்பட்டு எனும் கிராமம். இந்தக் கிராமத்தினை ஒட்டிச் செல்லும் சாலையோரம் 14ஆம் தேதி காலை, நடுத்தர வயது பெண்மணி ஒருவர் கழுத்து, கை, கால் உட்பட அவரது உடம்பில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு  இறந்துகிடந்துள்ளார். அவ்வழியே சென்ற கிராமத்து மக்கள் இந்தக் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டனர். உடனடியாக கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

 

உடனடியாக கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராமநாதன், இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்துகிடந்த அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், கொலை செய்யப்பட்ட பெண் யார், அவரை எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்து கொலையாளியைக் கைதுசெய்ய வேண்டி டி.எஸ்.பி. ராமநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 

 

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சின்னசேலம் அருகே உள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கீதா, வயது 37 என்பதும், இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயானவர் என்பதும்  தெரியவந்தது. மேலும், இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சங்கீதா தனது 2 ஆண் குழந்தைகளுடன் அம்மாபேட்டை பகுதியில் வசித்துவந்துள்ளார். 

 

இந்த நிலையில், சங்கீதாவின் பெண் தோழி ஒருவர் மூலம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது விவசாயி கந்தன் என்பவர் சங்கீதாவுக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரது அறிமுகம் திருமணத்திற்கு மீறிய உறவானது. ஒருகட்டத்தில் இருவரும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவிபோல் வாழ்ந்துவந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், சங்கீதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று கந்தன் சந்தேகம் அடைந்துள்ளார். 

 

இதனால் கந்தனுக்கும் சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்துவந்துள்ளது.  இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி சங்கீதா ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி இனிமேல் கந்தனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேசி முடிவு செய்துள்ளார். இதை உறுதிசெய்ய கந்தனிடமிருந்து எழுத்து மூலம் எழுதி வாங்கிக்கொண்டு, இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் சங்கீதா தனது 2 மகன்களுடன் மீண்டும் அம்மாபேட்டை சென்று தனியாக வசித்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் 14ஆம் தேதி அதிகாலை பல்ராம்பட்டு கிராம சாலை ஓரம் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். 

 

இந்த தகவல்களை விசாரணையின் மூலம் கண்டறிந்த போலீசார், சங்கீதாவின்  முன்னாள் கணவர் கந்தனை தேடிப்பிடித்து கைதுசெய்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், சங்கீதா தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்.  அதனால் சங்கீதாவின் மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் அந்த ஆத்திரத்தின் காரணத்தால் சங்கீதாவை வெட்டிக் கொலை செய்துள்ளதாக தனிப்படை போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.