Skip to main content

13 பேரின் கொலைக்கு காரணம் திமுக கொன்றது காங்கிரஸ் - பொன்.ராதா கிருஷ்ணன்

Published on 24/05/2018 | Edited on 25/05/2018

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

ஸ்டெர்லைட் பிரச்சனையில் மக்கள் 13 பேர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதுக்கும் திமுகதான் காரணாம். அவர்கள்தான் அந்த ஆலை தொடங்க அனுமதி அளித்தவர்கள். ஆனால் தற்போது திமுகவும், காங்கிரசும் பொய் போராட்டங்களின் மூலம் பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுதும் வகையில் மக்களிடம் பொய் பிரச்சாரம் நடத்தி  வருகின்றனர்.

 

 

1992 முதல் இன்று வரை திமுக, காங்கிரசால் இந்த ஆலை செயல்பட்டதற்கு  ஆதாரம் என்னிடம் உள்ளது. மக்களிடம் கருத்தே கேட்க வேண்டாம் ஆலை விரிவாகக்கம் செய்யலாம் என காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான் உத்தரவிட்டார் என்பதை மறந்துவிடமுடியாது யாராலும்.  

 

pon

 

அப்படி கடந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கான விரிவாக்க பணிக்கு அனுமதிகொடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி இருக்க தற்போது பொய் போராட்டங்களின் மூலம் மக்களிடத்தில் பாஜக பற்றி தவறான கருதுக்கள் பரபரப்பபடுவதை தூத்துக்குடி மக்கள் நம்ப வேண்டாம். இந்த ஆலையை கொண்டுவந்த திமுகவும், காங்கிரசும் இந்த  நாட்டில் நடமாடவே தகுதியில்லாத கட்சிகள் எனக்கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்