Skip to main content

தனிமையில் இருக்கும்போது இடையூறு; ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

mother who beat a  child with a boyfriend in salem

 

தாரமங்கலம் அருகே, ஆண் நண்பருடன் மது போதையில் சந்தோஷமாக இருந்தபோது அழுது இடையூறு செய்த குழந்தையை சுவரில் தூக்கி அடித்துக் கொலை செய்த இளம்பெண்ணையும், ஆண் நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.    

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லேஷ் (32). இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். இவர், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள காடம்பட்டியில் தங்கி, அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இதே சூளையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியைச் சேர்ந்த சக்திவேல், அவருடைய மனைவி கலைவாணி (27)  ஆகியோரும் வேலை செய்து வருகிறனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களும் குடும்பத்துடன் இங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.     

 

ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் மல்லேஷூக்கும் கலைவாணிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கலைவாணியும் மல்லேஷூம் அடிக்கடி ரகசியமாக சந்தித்து, சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கலைவாணியால் மல்லேஷை பிரிந்து இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவர், தனது கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு மல்லேஷூடன் சென்றுவிட்டார். ஓமலூர் அருகே புதூர் காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் அவர்கள் இருவரும் கணவன், மனைவி எனக்கூறி வேலைக்குச் சேர்ந்தனர். கலைவாணியை அடையத் துடித்த மல்லேஷூக்கு அவருடைய குழந்தையை ஏற்க மனமில்லாததால், குழந்தையை வளர்ப்பது குறித்து இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னால் அந்தக் குழந்தையை ஏற்க முடியாது என மல்லேஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

 

இதன்பிறகு ஒருவழியாக சமாதானம் அடைந்த  அவர்கள் இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அதே போதையுடன் இருவரும் ஒன்றாக தனிமையில் இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுதுள்ளது. தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்த வேளையில், குழந்தை அழுது இடையூறு செய்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் குழந்தை என்றும் பாராமல் தூக்கி சுவரில் அடித்துள்ளனர். பலத்த காயம் அடைந்த குழந்தையை மறுநாள் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு  சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் குழந்தை உயிரிழந்தது. இதற்கிடையே, கலைவாணியும் மல்லேஷூம் குழந்தையை சுவரில் தூக்கி அடித்ததால்தான் குழந்தைக்கு காயம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தாரமங்கலம் காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிப்பதற்தாக காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தபோது, அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.