Skip to main content

"ஊழலை ஒழிப்பேன்" - மீரா மிதுனின் புதிய அவதாரம்!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடலும், நடிகையுமான மீரா மிதுன், சக போட்டியாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் விதண்டாவாதம் செய்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று கூறி பிக்பாஸ் வீட்டில் புயலைக் கிளப்பினார். இந்த விஷயத்தில் சக போட்டியாளர்கள், வெளியில் உள்ள பார்வையாளர்களும் மீரா மதுனை வெறுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

 

meera mitun

 

அதன்பிறகு தமிழகத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு வழக்குப் பதிவு செய்கிறார்கள். இங்கு சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் நான் அரசியலுக்கு வர உள்ளேன். அதிமுக கட்சி, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. பெண்கள் அமைச்சராக பதவிக்கு வரவேண்டும் என்று கொளுத்திப் போட்டார். 

 

meera mitun

 

இப்படி சர்ச்சை ராணியாக வலம் வந்துகொண்டிருக்கும் மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'ஊழல் எதிர்ப்பு ஆணையம்' என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பின் தமிழக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஊழலை ஒழிப்பேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
publication of list of most corrupt countries released by transparency international

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வருடந்தோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலை, நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. 

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 100க்கு 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது. மேலும், ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு இந்த அமைப்பு புள்ளிகள் வழங்குகிறது.

இந்த பட்டியலில், 100க்கு 90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், குறைந்த அளவு ஊழல் கொண்ட நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், 87 புள்ளிகள் பெற்று பின்லாந்து 2வது இடத்தையும், 85 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 39 புள்ளிகள் பெற்று 93வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 40 புள்ளிகள் பெற்று 85வது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோன்று, கஜகஸ்தான், லெசொத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 புள்ளிகளுடன் இந்தியாவுடன் 93 இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

இப்பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 29 புள்ளிகள் பெற்று 133வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தையும், இலங்கை 34 புள்ளிகள் பெற்று 115வது இடத்தையும் பிடித்துள்ளன. 11 புள்ளிகள் பெற்று, அதிக அளவில் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்தில் (180வது) உள்ளது.