Skip to main content

தெற்கு திட்டை ஊராட்சித் தலைவரை சந்தித்து மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி ஆறுதல்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

May 17 Movement Thirumurugankanthi consoles buvanagiri Panchayat leader

 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி தலித் பெண் தலைவரை ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமர வைத்தும், அவரை கொடி ஏற்றவிடாமல் தடுத்தும் அவமரியாதை செய்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்வலைகளை உண்டாகியது.

 

இந்நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குழந்தை அரசன், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன், தமிழ் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன் உள்ளிட்டோர் நேரில் சென்று, அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் எதற்கும் பயப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தங்கள் இயக்கத்தின் சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இருப்பதாக ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி சரவணகுமாருக்கு நம்பிக்கை கூறினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்