Skip to main content

மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
mr

 

பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி உள்ளிட்டோரை வைத்து செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி வருகிறார்.  இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

3-வது முறையாக அவர் நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ராவணன் படத்தின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார்.  இதன் பின்னர்,  2015ம் ஆண்டில்  ஓ காதல் கண்மணி படத்தின் ரிலீசுக்கு பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டபோது  டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார்.

 

 

சார்ந்த செய்திகள்