Skip to main content

நண்பரின் மனைவியை கடத்தி 10 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்தவர் கைது - 2 பேர் தலைமறைவு

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

 

man who raped a friend's wife was arrested


 

நண்பரின் மனைவியை கடத்தி 10 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
 

நவிமும்பை பன்வெலை சஞ்செய் - கனகா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் தங்களது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தனர். காண்ட்ராக்ட் வேலை செய்யும் சஞ்செய்யை சந்திக்க அவரது நண்பர்கள் அவ்வப்போது அவரது வீட்டுக்கு வருவார்கள். 
 

அப்போது அவரது நண்பர்களுக்கு சஞ்செய் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் தெரியும். திடீரென ஒருநாள் கனகா காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்செய் மற்றும் அவரது மகள்கள் அக்கம் பக்கத்தில் பார்த்தனர். எந்த விவரமும் கிடைக்காததால் பன்வெல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 
 

இந்த நிலையில் அலங்கோலமாக, மிகவும் சோர்வாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தார் கனகா. அப்போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும், என்ன ஆனது எங்கே சென்றாய், நாங்கள் தேடாத இடமில்லை. போலீசிலும் புகார் கொடுத்துள்ளோம் என்றனர்.
 

அப்போது கனகா அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். சம்பவத்தன்று சஞ்சய் கூப்பிட்டதாக, அவரது நண்பர் பிந்து போயர் என்பவர் கனகாவை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த கார் எங்கும் நிற்காமல் சென்றுள்ளது. ஒரு இடத்தில் நின்றபோது இரண்டு ஆண்கள் ஏறியுள்ளனர். பிறகுதான் தெரிய வந்தது தன்னை அவர்கள் கடத்துகின்றனர் என்பது. 
 

தன்னை ஏன் காரில் அழைத்துச் செல்கிறீர்கள். எனது கணவருக்கு போன் போடும்படி கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இடத்தில் வைத்து கனகாவை, பிந்து போயர்  தனது நண்பர்களான உமேஷ், சிவா ஆகியோருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். 
 

10 நாட்களாக வெவ்வேறு இடங்களுக்ளில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் ஒரு பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளதாகவும் கனகா கணவரிடம் தெரிவித்துள்ளார்.
 

இதை போலீசிடம் சொல்ல வேண்டும் என்று கூறி, தனது மனைவி கனகாவை சஞ்செய் தனது மனைவியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார், பிந்து போயர் உள்பட 3 பேர் மீதும் கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பிந்து போயரை கைது செய்த போலீசார், தலைமறைவான அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.