கரை ஒதுங்கிய ஆண் சடலம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பாலம் அருகே இன்று ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல்படை ஆய்வாளர் இராஜராஜன் உடனடியாக அப்பகுதிக்கு வந்து அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இவர் ஆந்திரம் மாநிலம், நிசமாபாதை சேர்ந்த பண்டி ராதா கிருஷ்ணன் என்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் எதற்க்காக இங்குவந்தார், கொலையா அல்லது குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
பாலாஜி.