Skip to main content

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நாசர் மனைவி நீக்கம்!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

makkal needhi maiam party announced kameela nassar suspended

 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நாசர் மனைவி கமீலா நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். இன்று (21/04/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

 

20/04/2021 முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்