Published on 01/06/2020 | Edited on 01/06/2020

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ள நிலையில், இன்று முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் சில தளர்வுகளும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுரையில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். இறுதி ஊர்வலத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி இருந்த நிலையில் 50 பேர் வரை பங்கேற்கலாம், ஆனால் தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடித்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட வேண்டும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.