Skip to main content

மதுரை விமான நிலையத்தில் தங்க பிஸ்கெட்டுகளை விழங்கிய 20 பயணிகள் சிக்கினர்

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
மதுரை விமான நிலையத்தில் தங்க பிஸ்கெட்டுகளை விழங்கிய 20 பயணிகள் சிக்கினர்



மதுரை மாவட்டம் மதுரை விமான நிலயத்தில் கொழும்பில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின் பேரில் நேற்று மதியம் கொழும்பில் இருந்து மதுரை வந்த 100க்கும் மேற்பட்ட பயணிகளிடம் சோதனை செய்தனர் அதில் சந்தேகப்படும்படியான பெண்கள் உள்பட 20 பயணிகளை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்கள் தங்க பிஸ்கட்டுகளை விழுங்கி இருப்பது தெரிய வந்தது மேலும் அந்த பயணிகளை அருகில் உள்ள தனியார் மருதுவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு எனிமா. கொடுக்கப்பட்ட பிறகு 30 கிலோ தங்க பிஸ்கட்டுகளை எடுக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

-முகில்

சார்ந்த செய்திகள்