Skip to main content

முகநூலில் காதல் - செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த லூகாஸுக்கும், தமிழ்ப்பெண் சாருலதாவுக்கும் திருமணம்

Published on 03/08/2018 | Edited on 27/08/2018
love

 

விருத்தாசலத்தில் செக்குடியரசு நாட்டை சேர்ந்தவருக்கும்,   தமிழ்ப்பெண்ணுக்கும்  திருமணம் நடைபெற்றது.
 
கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் குணசேகர் என்பவரின் மகள் சாருலதா. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர்  லூகாஸ். இவர்கள் இருவருக்கும் முகநூலில் Chating மூலம் நட்புணர்வு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்பு, சாருலதா செக் குடியரசுநாட்டிற்கு சென்று அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் நட்பு  காதலாக மாறியது. கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.


இருவருடைய வீட்டாருக்கும்  இவர்களுடைய காதல் தெரிய வந்துள்ளது. பின்பு இந்தியா வந்த லூகாஸ் சாருலதாவின் வீட்டிற்கு வந்து பெற்றோர்களிடத்தில் பேசியுள்ளார். மத நம்பிக்கையில்லாத மனிதராக இருந்த லூகாஸ் இந்துமதத்தின் பால் ஈர்க்கப்பட்டு,  இந்து முறைப்படி இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். 

 

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு திரு கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் செக்குடியரசு நாட்டைச் சேர்ந்த லூகாஸுக்கும், தமிழ்ப்பெண் சாருலதாவுக்கும் இரு வீட்டார் முன்னிலையில் இந்து முறைப்படி மேளதாள, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது. மனமகன் லூகாஸ் சாருலதாவின் கழுத்தில் தாலி கட்டி தன் துணைவியாக்கிக் கொண்டார்.
மணமக்களை  உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்த, மணமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Again a manslaughter; Terrible in Chennai

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.