Skip to main content

கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கரோனா!

Published on 03/05/2020 | Edited on 03/05/2020

 

 Koyambedu market Corona virus impact

 

இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து, சமூக இடைவெளியை முறையாக கடைபிடியுங்கள் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்திய போதிலும், 30% மக்கள் அதை அலட்சியம் செய்தது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகும் கூட சமூக இடைவெளியின்றி கோயம்பேடு மார்கெட்டில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது. இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடைய 119 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெரியமேடு ஷ்ரிங்கர் தெருவில் அடுத்தடுத்து 5 வீடுகளில் 8பேருக்கும், கோயம்பேடு சந்தையில் இருந்து தஞ்சை சென்ற பழவியாபாரிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

 

 


 

சார்ந்த செய்திகள்