Skip to main content

தொகுதியை அறிவோம்... திருவண்ணாமலை!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம் ( தனி ), திருப்பத்தூர், ஜோலார்பேட்டை என 6 தொகுதிகள் உள்ளது. இதில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், திருப்பத்தூர் என 4 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்களும், கீழ்பென்னாத்தூர், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

 

election

 

சட்டமன்றத்தில் மட்டும்மல்ல இந்த பாராளுமன்ற தொகுதி திமுக வரலாற்றில் மிக முக்கியமான தொகுதி. திமுக என்கிற கட்சி தொடங்கப்பட்டு திமுக எதிர்கொண்ட முதல் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு எம்.பிக்கள் திமுக சார்பில் வெற்றி பெற்றனர். அதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தர்மலிங்கமும் ஒருவர். அன்று முதல் தற்போதைய தேர்தல் வரை திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது.

 

 

1971 தேர்தலில் திருவண்ணாமலை தொகுதி என்பது திருப்பத்தூர் தொகுதியாக பெயர் மாற்றம்மடைந்தது. அப்போது நடந்த தேர்தலில் திமுக சின்னராஜ், 1977ல் திமுக சி.என்.விஸ்வநாதன், 1980ல் திமுக முருகையன், 1984, 1989, 1991ல் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் மாறி மாறி கூட்டணி வைத்து காங்கிரஸ் ஜெயமோகன் வெற்றி பெற்றார். 1996, 1998, 1999, 2004, 2009 என தொடர்ச்சியாக 5 முறை திமுகவை சேர்ந்த வேணுகோபால் வெற்றி பெற்றார். 2014ல் அதிமுக வனரோஜா வெற்றி பெற்றார். திமுக தொடங்கியது முதல் இப்போது வரை திமுகவின் தொகுதிகளில் வெற்றி தொகுதி என்பது கட்சி தலைமையின் நம்பிக்கை.

 

 

இந்த தொகுதியின் பெரும்பான்மை சமூகமாக வன்னியர், தலித், கவுண்டர்கள், அதற்கடுத்தயிடத்தில் முதலியார், கிருஸ்த்துவர்கள், இஸ்லாமியர்கள் என்கிற வரிசையில் உள்ளனர்.

 

இந்த தொகுதியில் 2014ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 13,31,724 வாக்குகள். இந்த 2019 தேர்தலில் கடந்த ஜனவரி மாத கணக்கின்படி, 14,54,657 வாக்குகள் உள்ளன. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 14 ஆயிரம் பேர் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

 

இந்த தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் மட்டும்மே. நிலத்தடி நீரை மட்டும்மே விவசாயம் நடக்கும் பகுதியிது. ஒரு குறிப்பிட்ட பகுதி விவசாய நிலங்களுக்கு மட்டும் சாத்தனூர் அணை நீர் பாசனத்துக்கு கிடைக்கும். விவசாயம் இல்லாத காலங்களில் இப்பகுதி மக்கள், பெங்களுரூ, மாண்டியா, ஷிவமோகா, சென்னை போன்ற இடங்களுக்கு விவசாய வேலைக்கும், கொத்தனார் வேலைக்கும் செல்கின்றனர். இதனால் கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் இந்த தொகுதியுள்ளது.

 

 

பிரபலமான அண்ணாமலையார் கோயில் இந்த தொகுதிக்குள் தான் வருகிறது. மாதத்துக்கு 20 லட்சம் பக்தர்களை திருவண்ணாமலை நகரம் காண்கிறது. இதன் மூலம் ஓரளவு சுற்றுலா வளர்ச்சி அடைந்து தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. மற்றப்படி இந்த தொகுதியில் விவசாயமே பிரதானம்.

 

தொகுதியின் தேவைகள்……..

 

1.   வேலூர் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஏலகிரி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது திருப்பத்தூர், ஜோலர்பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம், ஏலகிரி பகுதி மக்களின் 35 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது வேட்பாளர்கள் வாக்குறுதி தருகிறார்கள், வெற்றி பெற்றவுடன் மறந்துவிடுகிறார்கள்.

 

2.   திண்டிவனத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை வழியாக ஜோலார்பேட்டைக்கு இரயில்பாதை அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை. அந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு பணிகள் தொடங்கி, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தும், பணிகள் தொடங்கவில்லை.

 

3.   திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்ற பணிகள் நடைபெற்று அவை பாதியில் நிற்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள், கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தியும் மத்திய – மாநில அரசுகள் கண்டுக்கொள்ளவில்லை.

 

4.   திருப்பத்தூர் பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

 

5.   செங்கம் பகுதியில் அரசின் சார்பில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகளில் முக்கியமானவையாகும்.

 

6.   சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும், மத்திய அரசின் நிதியுதவியோடு பெரிய தளமாக மாற்ற முயற்சிகள் செய்ய வேண்டும்.

 

7.   திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை பிரதான சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

8. எட்டுவழி சாலையை புறக்கணிக்க வேண்டும்.

தற்போது இந்த தொகுதியில் திமுக சார்பில் அண்ணாதுரை என்பவரும், அதிமுகவில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி என்பவரும் களத்தில் நிற்கிறார்கள். இவர்களில் மேற்கண்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி தருகிறேன் என்பவருக்கு இந்த தொகுதி சாதகமாக இருக்கும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.