Skip to main content

காஞ்சிபுரத்தில் நாளை முதல் இறைச்சிக்கடைகள் மூடல்!

Published on 03/04/2020 | Edited on 03/04/2020


கரோனா பரவலுக்கு மதச்சாயம் பூசுவதைத் தடுக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் அனைத்து மத தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எஸ்.பி. சாமுண்டீஸ்வரி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (04/04/2020) முதல் மறு உத்தரவு வரும் வரை இறைச்சிக்கடைகள் மூடப்பட உள்ளதாக ஆட்சியர் அறிவித்தார். 
 

kanchipuram district collector announced


அதேபோல் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் 14 ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகளை திறக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.மேலும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இறைச்சிக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்