Published on 25/08/2022 | Edited on 25/08/2022
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று மாணவி உயிரிழந்தது தொடர்பாக, நடந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வரும் நிலையில், மேலும் இரண்டு பேரை கைது செய்தனர்.
இதன்மூலம், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது.