Skip to main content

பிறந்து 17 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தவித்த இளம்பெண்... உதவிக்கரம் நீட்டிய எல்ஐசி ஊழியர்கள்!

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

புதுக்கோட்டை அருகே நெய்வாசல்பட்டி கிராமம். பாண்டிமகள்  முத்துலெட்சுமி. கடந்த ஆண்டு திருமணமான முத்துலெட்சுமி தலைப்பிரசவத்திற்கு தாய் வீட்டுக்கு வந்தார். கஜாவின் ஆட்டம் தொடங்கிய 16- ந் தேதி அதிகாலை. முத்துலெட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதேபோல் தங்கி இருந்த வீடு கஜா புயலால் ஆட்டம் கண்டது. பிரசவம் என்றதும் புயலையும் பொருட்படுத்தாமல் வந்தார் ஆட்டோக்காரர். ஆட்டோவில் முத்துலெட்சுமியை ஏற்றிக் கொண்டு புறப்படும் போது தங்கியிருந்த கூரை வீடு கஜாவின் ஆட்டத்தில் தரைமட்டமானது.

 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துலெட்சுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் அழகான ஆண்குழந்தை பிறந்தது. 

 

பிரசவத்தின் போது பிரச்சினை இருந்ததால் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை வரை மருத்துவமனையில் இருந்த முத்துலெட்சுமி அன்று மதியம் வீடு திரும்பினார். பிறந்த குழந்தையுடன் தாய் வீடு திரும்பிய முத்துலெட்சுமியும் புது வரவான குழந்தையும் தங்க வீடு இல்லை. 

 

kaja storm in pudukkottai...baby and mother Lonely in village

 

உடனடியாக வீடு கட்ட வசதியில்லாத குடும்பம். துவித்தது. அருகிலேயே ஆட்டுக்கொட்டகையில் முத்துலெட்சுமியும் குழந்தையும் தங்க வைக்கப்பட்டனர். வெட்டவெளியில் ஆடுகளை கட்டுவதற்காக தாழ்வாகக் கட்டப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் கடந்த 4  நாட்களாக முத்துலெட்சுமி தங்கி வருகிறார். பகலில் கொழுத்தும் வெயில் இரவில் பனி, சாரல் என அத்தனையும் பொருத்துக் கொண்டு குழந்தையை அணைத்துக் கொண்டு தங்கி இருக்கிறார். சுற்றிலும் எந்த தடுப்பும் இல்லை. 

 

 

இந்நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த காப்பிட்டு கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் என்.கண்ணம்மாள், வி.லதாராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் வெட்டவெளியில் தன்னந்தனியாக இருக்கும் வீடும் உடைந்து கிடக்கிறது. அருகில் உள்ள பந்தலில் குழந்தையுடன் ஒரு பெண்.. தூரத்தில் இருந்து பார்த்த காட்சியை அருகில் சென்று பார்த்தார்கள் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த முத்துலெட்சுமியையும், குழந்தையையும் பார்த்தனர். அதிர்ச்சியடைந்து நின்றவர்கள்.. 

 

kaja storm in pudukkottai...baby and mother Lonely in village

 

கொண்டு வந்த பொருள் பத்தாது என்பதால் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான மெத்தை, துணிகள், சோலார் விளக்கு, கொசுவர்த்தி, ஹார்லிக்ஸ் பாட்டில் மற்றும் உணவுப் பொருட்களை உடனே வாங்கி வந்து வழங்கினார்கள். 

 

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் தாயும் குழந்தையும் இப்படி அவதிப்பட்டு வருவது பற்றி எந்த தகவலும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லை போலும். இனிமேலாவது இன்றைய மழையில் தவிக்கும் தாய்க்கும், குழந்தைக்கும் தங்க வசதி செய்து கொடுப்பார்களா பார்ப்போம். 

 

இந்த தகவல் அறிந்த ஒரு தன்னார்வ தொண்டர்கள் குடிசை அமைக்க ஏற்பாடு செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். அரசாங்கம் ஒரு நல்ல வீட்டை கட்டிக் கொடுத்தால் நல்லது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை முயற்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Arrested old man attempted to incident

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.

Arrested old man attempted to incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் புதுச்சேரி அரசு, ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. கருணாஸும், விவேகானந்தனும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள விவேகானந்தன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குளிக்க பயன்படுத்தும் சோப்பைச் சாப்பிட்டும், துணியால் முகத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.