Skip to main content

ஐ.பி.எல். போட்டியை தடுத்து நிறுத்துவோம்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
PRPONDIYAN 600.jpg



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைIPLபோட்டியை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஏப்ரல் 10ம் தேதி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்களை திரட்டி முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, 
 

தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்பிற்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டும் மோடி அரசாங்கம் கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்க்கான வகையில் நீதிமன்ற தீர்ப்பையே முடக்கப் பார்க்கிறது.
 

உடைகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கப் பார்க்கிறது. கருத்து பறிமாற்றம் என்ற பெயரில் விவாதங்களில் அவதூறு பிச்சாரங்களில் பாஜக ஈடுபடுகிறது. மிரட்டுவதும், அச்சுறுத்தியும் வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுப்படுவதை ஏற்றுக் கொள்ளாத பாஜக பிளவுபடுத்தப் பார்க்கிறது..
 

இதனை கண்டித்தும் உடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டு அதனை அமைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டமும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.
 

போராட்டத்தில் விவசாயிகள் சங்கங்கள் பங்கேற்க திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஆதனை ஏற்று விவசாயிகள் முழுமையாக அனைத்து போராட்டங்களிலும் ஒன்றுபட்டு கலமிறங்க வேண்டும்.
 

திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி போராட்டத்திற்கு தமிழகத்தின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு பா.ம.க தானே முன்வந்து போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது வரவேற்கதக்கது. அனைத்து கட்சிகளுக்கும் எதிர்கட்சி தலைவர் அழைப்பு விடுத்து ஒன்றிணைக்க வேண்டுகிறேன்.
 

மாணவர்கள், இளைஞர்கள். முழுமையாக ஜல்லிக்கட்டு போராட்டம் போல் அகிம்சை வழியில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும். காவிரி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபவதை திசை திருப்பும் உள்நோக்கத்தோடு சென்னை IPL கிரிக்கெட் போட்டியை நடத்த பாஜக சதி செய்கிறது இதனை ஒத்தி வைக்க வேண்டும்.
 

தமிழக அரசு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைIPLபோட்டியை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஏப்ரல் 10ம் தேதி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்களை திரட்டி முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என்றார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.