Skip to main content

தமிழகத்தில் பணியாற்றிவந்த கடற்படை அதிகாரி எரித்துக் கொலை!

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

incident in Naval officer working in Tamil Nadu

 

கோவை ஐஎன்எஸ் அக்ரனியில் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநில கடற்படை அதிகாரி ரசூஜ்குமார் மூன்று நாட்களுக்கு முன் அவர் மாயமானதாக அவரது பெற்றோர்கள் புகார் அளித்திருந்த நிலையில், குஜராத்தில் அவரை எரித்துக் கொன்றது தெரிய வந்துள்ளது.

 

ஜார்கண்டில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த சூரஜ்குமாரை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டப்பட்ட நிலையில், பணம் கிடைக்காததால் காரில் அழைத்துச் சென்று அவரை எரித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பணியாற்றி வந்த கடற்படை அதிகாரி பணத்துக்காக கடத்தி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்