Skip to main content

குமாரபாளையத்தில் தி.மு.க நிர்வாகி படுகொலை..!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

incident in kumarapalaiyam

 

நாமக்கல் குமாரபாளையத்தில், தி.மு.க வார்டு செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அந்தப் பகுதியின் (தி.மு.க.வின்) வார்டு செயலாளர். இவர் கடந்த 20-ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தனது நண்பர்களுடன், காவேரி நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடையில் பேசிக்கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞன் டூவீலரில் வந்து வேகமாக இறங்கியதோடு, திடுதிப்பென சரவணனை கீழே தள்ளிவிட்டு சரவணன் மீது அமர்ந்து, தனது கையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாகக் குத்தினார்.

 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சரவணனுடைய நண்பர்கள், அந்தத் தாக்குதல் நடத்திய பிரகாஷை தடுத்தனர். அப்பொழுது சரவணனின் நண்பர்கள் பிரபாகரன், முரளிதரன் ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து பிரகாஷ் தப்பி ஒடிவிட்டார். அதிக கத்திக்குத்து காரணமாக சம்பவ இடத்திலேயே சரவணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சரவணனின் நண்பர்களான முரளிதரன், பிரபாகரன் ஆகியோரை, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். 

 

incident in kumarapalaiyam

 

இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் அங்கு வந்து கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், சரவணனுக்கும் கொலையாளி பிரகாஷுக்கும் ஒரு கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும் பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த சரவணன் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதி திமுகவின் செயலாளராக உள்ளார். சரவணனை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்ற பிரகாஷை போலீசார் வலைவீசித் தேடிவந்தனர். குமாரபாளையத்திலிருந்து (சேலம்) எடப்பாடி செல்லும் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையே கொலையாளி பிரகாஷும் அவனது நண்பனான கோவிந்தராஜூம் 21 ஆம் தேதி மாலை சங்ககிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பிறகு அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.