Skip to main content

'இந்தி நல்லா பேசுவேன்... கூத்தாடி கூத்தாடினு சொல்லாதீங்க' -ஆர்.கே.சுரேஷ் எமோஷனல்!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

 'I speak Hindi well ... don't say koothadi' - RK Suresh Emotional!

 

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் 'கூத்தாடி கூத்தாடி என்று சொல்லாதீர்கள்' என பேசியுள்ளார்.

 

அவர் பேசியதாவது,  ''எல்லோராலும் சங்கர் சார் ஆகிட முடியாது. நான் பார்த்து வியந்த இயக்குநர்களில் அவரும் ஒருவர். ஒரு கன்டென்டை எப்படி எஸ்டாப்ளிஷ் பண்ணிக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்த மிகச் சிறந்த இயக்குநர் சங்கர் சார். அதனால்தான் அவர் அன்றிலிருந்து இன்றுவரை பெஸ்ட் டைரக்டர் என்றிருக்கிறார்.

 

வீட்டுக்குள்ளேயே பணத்தை போட்டு பூட்டி வைத்துவிட்டு திடீரென ஸ்ரீலங்கா மாதிரி ஒரு நாளைக்கு இந்தியா ஆயிடுச்சின்னா என்ன பண்ணுவீங்க. அதனால் 4 பேரு கொடுத்து சந்தோஷத்தை பார்க்கும் பொழுது அது ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்.

 

இன்றைக்கு ஒடிடி என்ற ஒரு காலம் வந்து விட்டது. அது ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. இதெல்லாம் நல்ல விஷயம் தான். கேஜிஎப் ஹிட்டானதோ, ஆர்ஆர்ஆர் ஹிட்டானதோ திரையரங்குகளுக்கு வேண்டுமானால் நல்ல விஷயமாக இருக்கலாமே தவிர ஒரு நாளு சின்ன படங்கள் எங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சின்ன படங்கள் ஹிட் செய்தது என்றால் முதலில் சந்தோசப்படுவது நான்தான்.

 

70 சதவிகிதம் ரீஜினல் படங்கள் வரவேண்டும் 30 சதவிகிதம் தான் அதர் லாங்குவேஜ் படங்கள் வரணும். இப்படிதான் பல மாநிலங்களில் இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் 70 சதவிகிதம் அதர் லாங்குவேஜ் படங்கள், டப்பிங் படங்கள் ரிலீசாகி விட்டது.

 

மார்வாடிகள் முன்ன மாதிரி கிடையாது. முன்னாடியே நல்லவர்களாகத்தான் இருந்தார்கள். கரோனாவிற்கு பிறகு இன்னும் மனிதநேயம் உங்களுக்கு கூடியிருக்கிறது. நான் எப்படி இந்தி பேசுவேன் என்று கேட்டார்கள். நான் படிச்சதெல்லாம் மார்வாடி பசங்க கூட, இந்தியில் நல்லா பேசுவேன்.

 

நல்ல கன்டென்ட் இருக்கா அமேசான் இருக்கு, நல்ல கன்டென்ட் இருக்கா நெட்பிலிக்ஸ் இருக்கு. அதுக்கப்புறம் முடிஞ்சா நீங்க தியேட்டர் ரிலீஸ் பண்ணுங்க. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் கூத்தாடி கூத்தாடி'னு சொல்லாதீங்க நாங்க எல்லாம் உங்களை மகிழ்விக்கிறவர்கள்'' என்றார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகும்  ‘ஒயிட்ரோஸ்’

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 White rose movie - kayal anandhi

கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித் நடித்துள்ள திரைப்படம் “ஒயிட் ரோஸ்”. இத்திரைப்படத்தின் டிரைலர் மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஒரு பாடலான “I’ve Arrived நானே வந்தேன்” எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இப்பாடலை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு “பவர்ஃபுல் சாங்” என பாடலை பாராட்டி நெகிழ்ந்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ளார். பர்மா,என்னோடு விளையாடு, ஒரு கோடை மர்டர் மிஸ்டரி  படங்களுக்கு இசையமைத்த சுதர்ஷன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Next Story

தொடரும் மர்மம்; மூன்று மாதத்தில் நான்கு இளம் நடிகைகள் மரணம்!  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
sophia leone passed away

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோபியா லியோன். 26 வயதான சோபியா லியோன், தனது 18வது வயதிலிருந்தே ஆபாச படங்களில் நடித்துவந்தார். இவர் அமெரிக்க மாடலிங் ஏஜென்ஸியான ‘101 மாடலிங் இங்க்’ நிறுவனத்தின் மூலம் அறிமுகமானா சில காலத்திலேயே பிக் ஸ்டாராக உருவெடுத்தார். படங்களில் நடிக்க தொடங்கிய 9 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலராக உயர்ந்தது.

இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகர்கி பகுதி அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்த சோபியா லியோனை அவரது குடும்பத்தினர் தொடர்புகொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சோபியா லியோன் தங்கிருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மயக்கநிலையில் கிடந்த சோபியா லியோனை பார்த்து அதிர்ச்சியந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சோபியா லியோன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 9 ஆம் தேதி நிதி திரட்டும் சமூக வலைதளமான ‘கோ ஃபன்ட் மீ’ வலைதளத்தில் சோபியா லியோன் வாளர்ப்பு தந்தை மைக் ரொமேரோ, “சோபியாவின் இறந்த செய்தியை நான் ஒரு கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவரின் இழப்பு எங்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பு..'' என பதிவிட்டுள்ளார். மேலும் அவரது இறுதி சடங்கிற்கு நிதி திரட்டும் அறிவிப்பையும் வெளியிட்டார். முதலில், சோபியாவின் இறுதி சடங்கிற்கு 12,000 டாலராக இலக்கு தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 5,725 டாலர் சேர்த்து உயர்த்தப்பட்டது. 

இதனிடையே, நடிகையின் மரணம் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், “Albuquerque homicide detectives மூலம் நடிகையின் மரணம் பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும், நடிகை மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்” அந்நாட்டு ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் தரப்பிலும் சோபியா லியோனின் மரணம் தற்கொலை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை இறப்பு செய்தி வெளியானதில் இருந்து அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் கடைசியாக கொடுத்த பேட்டி மற்றும் நடித்த படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் சோபியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், தீர விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில் கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ்(24), கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) ஆகிய  மூன்று ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில், தற்போது 4ஆவதாக சோபியா லியோன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தைனா ஃபீல்ட்ஸ் முன்னதாக ஆபாச திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிர்வலைகளை எழுப்பி இருந்தார். அதன் பிறகே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூன்று பேரின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது நடிகை சோபி லியோன் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.