Skip to main content

பள்ளி தோழனின் கூடாநட்புக்காக கூலிபடையோடு சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வியாபாரியான அக்பர் (31) என்பவர் கடந்த மாதம் 7 ஆம் தேதியன்று கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
 

இராணிப்பேட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் அக்பர். 31 வயதான இந்த இளைஞர் மாட்டு வியாபாரியாக உள்ளார். சந்தைகளுக்கு மாடுகளை ஏற்றுமதி செய்து வருகிறார். இவருக்கு 27 வயதான ரியானா என்ற மனைவியும், 3 வயது அப்துல் வாஹித் என்ற மகனும் உள்ளனர்.
 

கடந்த 7 ஆம் தேதியன்று இராணிப்பேட்டை சந்தை என்பதால் அக்பர் விடியற்காலையே வீட்டிலிருந்து அவரது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றதாகவும் பின்னர் வன்னிவேடு அருகே கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 

இந்த சம்பவம் குறித்து வாலாஜாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
 

இந்த விசாரணையில் அக்பரின் மனைவி ரியானா அவரது கள்ளக்காதலனும், பள்ளித்தோழனுமான காலித் அகமதுடன் சேர்ந்து 6 இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அவரது வீட்டிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு பின்னர் பிரேதத்தை நெடுஞ்சாலை ஓரமாக வீசிச்சென்றது அம்பலாமாகியுள்ளது. 
 

அதுக்குறித்து போலிஸ் தரப்பில் கூறுவது என்னவெனில், ரியானாவின் பள்ளித்தோழனான காலித் அகமதுவுக்கும் ரியானாவிற்கும் இடையே இருந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது. ரியானாவுடன் தனியாக வசித்து வந்த அவரது கணவரான அக்பருக்கு இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தவுடன் நிறுத்துக்கொள்ளுமாறு கண்டித்துள்ளார். 
 

murder case


 

ஆனால் இதில் ஆத்திரமடைந்த ரியானா அவரது கள்ளக்காதலான காலித் அகமதுவிடம் அக்பர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், காப்பாற்றுமாறு கூறியதாக தெரிகிறது. 
 

காதல் கண்ணை மறைக்க ஆத்திரமடைந்த காலீத் அவனது நண்பர்களான வாலாஜாப்பேட்டை சேர்ந்த சதீஷ் என்ற சலூன் தொழிலாளியுடன் சேர்ந்து அக்பரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். 
 

இதற்கு 6 இலட்சம் பேரம் பேசிய சதீஷ் பாகவெளியை சேர்ந்த சேர்ந்த லோகநாதன், விவேக், கிருபாகரன், வாலாஜாப்பேட்டை சேர்ந்த சின்னகுட்டி, ராஜு ஆகியோரை கொலையாளிகளாக புக் செய்துள்ளான். 
 

கடந்த செப்டம்பர் 7 ம் தேதியன்று ரியானாவின் வீட்டிற்கு கூலிப்படையுடன் சென்ற காலீத் அகமது, படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த அக்பர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியுள்ளனர். 
 

அக்பர் துள்ளும்போது அவரது கால்களை மற்றவர்கள் பிடித்து அமுக்கியுள்ளனர். அவர்களுக்கு அக்பரின் மனைவி ரியானாவி உதவி செய்துள்ளார். அவர் இறந்தது உறுதியானவுடன் அவரது சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் சுற்றித்திரிந்துள்ளனர். 
 

மேலும் அவரது இருசக்கர வாகனத்தை சந்தைக்கு அருகில் விட்டு விட்டு சந்தேகம் ஏற்படாதவாறு பிரேதத்தை வன்னிவேடு அருகே நெடுஞ்சாலை ஓரமாக வீசிவிட்டு விபத்தில் இறந்தது போல செட்டப் செய்துவிட்டு கொலையாளிகள் காரில் தப்பிச்சென்றுள்ளனர்.
 

இந்த நிலையில் அக்பரின் உடலை கைப்பற்றிய வாலாஜாப்பேட்டை போலீசார் அவரது கழுத்தில் ஏற்பட்ட காயங்களை வைத்து இது கொலை என முடிவு செய்த பின் விசாரணையை தீவிரப்படுத்தினர். 
 

சந்தேகத்தின் பேரில் அக்பரின் மனையின் போன் ரெக்கார்டுகளை ஆய்வு செய்த போது அதில் இருந்து காலீத் அகமதுவிடம் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியப்போது ரியானாவின் கள்ளக்காதலும் அதற்கு இடையூறாக இருந்த அக்பரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது. 
 

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அக்பரின் மனைவி ரியானா மற்றும் விவேக், சதீஷ், லோகநாதன், கிருபாகரன் ஆகியோரை வாலாஜாப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியும் தலைமறைவாகியுள்ள காலித் அகமது, சின்னகுட்டி, ராஜு உட்பட மூன்று பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.